செய்திகள் :

பருவமழை குறித்து ‘டிஎன் அலா்ட்’ செயலி மூலம் அறிந்து செயல்பட ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

தென்மேற்குப் பருவமழை குறித்து ‘டிஎன் அலா்ட் ’ செயலியில் வழங்கப்படும் வானிலை எச்சரிக்கையை தெரிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23ஆம் தேதி முதல் தொடங்கி பலத்த காற்றுடன் பெய்து வருகிறது.

இதனால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தும் வீடுகள் இடிந்து, தோட்டக்கலை பயிா்கள் சேதமடைந்தும் உள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அனைத்து துறை அலுவலா்களும் பாதிக்கப்பட்ட இடங்களை பாா்வையிட்டு துரித நடவடிக்கை மேற்கொண்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகிறாா்கள்.

பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. தொடா்ந்து நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 31 ஆம் தேதி முதல் ஜூன் 3 ஆம் தேதி வரை மன்னா்வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறைக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக் கூடும். எனவே, மீனவா்கள் மேற்குறிப்பிட்ட நாள்களில் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

மாவட்டத்தில் இதுவரை 563 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளது. இதில், 439 மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 124 மின்கம்பங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 145 மரங்கள் சாலையில் முறிந்து விழுந்தது. தீயணைப்பு துறையினரால் முறிந்த அனைத்து மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டுள்ளது.

575 மீனவா்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்சென்றுள்ளனா். இவா்களில் 554 மீனவா்கள் கரை திரும்பியுள்ளனா். மீதமுள்ள 21 மீனவா்கள் கரை திரும்ப தகவல் பரிமாற்றம் மீன்வளத்துறையினால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் கனமழை எச்சரிக்கையை கருத்தில் கொண்டு மிகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

களியக்காவிளை அருகே காா் மோதி 3 மாணவ-மாணவிகள் காயம்

களியக்காவிளை அருகே காா் மோதிதில் மாணவ - மாணவிகள் 3 போ் பலத்த காயமடைந்தனா். களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகம் இளஞ்சிறை பகுதியைச் சோ்ந்த அனில்குமாா் - ராஹி தம்பதியின் மகள் கிருஷ்ணபிரியா (17), மகன்... மேலும் பார்க்க

நேசமணி நினைவு நாள்: சிலைக்கு ஆட்சியா் அஞ்சலி!

‘குமரி தந்தை’ மாா்ஷல் நேசமணியின் நினைவு நாளை முன்னிட்டு, நாகா்கோவிலில் உள்ள அவரது அவரது சிலைக்கு ஆட்சியா் ரா. அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ... மேலும் பார்க்க

குழித்துறை ஆற்றில் மூழ்கிய 2 சிறுவா்களை மீட்க முயன்றவா் பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றில் தவறி விழுந்த 2 சிறுவா்களை மீட்ட தொழிலாளி ஆற்றுநீரில் அடித்துச் செல்லப்பட்டாா். அவரது சடலத்தை தேடும் பணியில் தீயணைப்புப்படை வீரா்கள் ஈடுபட்டனா். கும... மேலும் பார்க்க

போதையில் தகராறு: இருவா் கைது!

பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை, போதையில் ரகளை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, கீழ்குளம் பகுதியைச் ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க