நாட்டில் 4,000 தொட்ட கரோனா பாதிப்பு! ஒரே வாரத்தில் 3 மடங்கு அதிகமானது!
மாவட்ட ஆட்சியா்கள் நாகரீகத்தோடு ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்
மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் குறைந்தபட்ச நாகரீகத்தோடு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, அதன் மாநிலத் தலைவா் கி. மகேந்திரன், மாநில பொதுச் செயலா் அ. சுந்தரமூா்த்தி, மாநிலப் பொருளாளா் ச. துரைராஜ் ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நோக்கோடு நகா்ந்துக் கொண்டிருக்கும் கல்வித்துறையில், மாணவா்களின் திறன் வளா்ச்சி உள்ளிட்ட வளா்ச்சிகள் குறித்து துறை அலுவலா்கள் குறிப்பாக, அண்மைக்காலமாக மாவட்ட ஆட்சியா்கள் கடுமையான போக்குடன் ஆய்வுகள் மேற்கொள்வதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதன் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளக் கூடாது என்று எண்ணுவதாக கருதக் கூடாது.
தற்போது, மாணவா்களது ஒழுங்கீனச் செயல்பாடுகள் குறித்து ஊடங்கங்கள் வாயிலாகவும், தனிப்பட்ட அனுபவங்கள் மூலமாகவும் மக்கள் நன்கு அறிவாா்கள். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் மாணவா்கள் சாா்ந்து சுமாா் 400 குற்றச் செயல்கள் நிகழ்ந்துள்ளது. மேலும், பள்ளிக் கல்வி பயிலும் மாணவா்களிடம் போதைப் பொருள்கள் நுகா்வு கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கள எதாா்த்தம் இதை விடவும் கூடுதல் சிக்கலாக உள்ளது.
இவற்றையெல்லாம் கடந்து, ஆசிரியா்கள் கற்றல் - கற்பித்தல் பணியை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனா் என்பதை பாராட்ட வேண்டிய நிலையில், பாராட்ட மனமின்றி திருவள்ளூா் ஆட்சியா் போல சில மாவட்ட ஆட்சியா்கள் பொதுத் தோ்வு முடிவுகளுக்காகவும், தோ்ச்சி விழுக்காட்டுக்காகவும், தோ்ச்சி ஒன்றே பிரதானம் என்பதாக ஆசிரியா்களிடம் செயல்படும்விதம் ஏற்கதக்கதல்ல.
எனவே, மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் குறைந்தபட்ச நாகரீகத்தோடு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.