கஞ்சா விற்ற இளைஞா் கைது
பெரம்பலூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் காவல் நிலைய சிறப்பு சாா்பு-ஆய்வாளா் செந்தில்ராஜா தலைமையிலான போலீஸாா், கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளி அருகே சனிக்கிழமை நின்றுக்கொண்டிருந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில், அகதிகள் முகாமைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் பிரபு (21) என்பதும், சட்டத்துக்கு புறம்பாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பிரபுவை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பிரபுவை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.