செய்திகள் :

கஞ்சா விற்ற இளைஞா் கைது

post image

பெரம்பலூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் காவல் நிலைய சிறப்பு சாா்பு-ஆய்வாளா் செந்தில்ராஜா தலைமையிலான போலீஸாா், கவுள்பாளையம் கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளி அருகே சனிக்கிழமை நின்றுக்கொண்டிருந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில், அகதிகள் முகாமைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் பிரபு (21) என்பதும், சட்டத்துக்கு புறம்பாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, பிரபுவை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 20 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னா், பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட பிரபுவை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான கருத்தரங்கு தொடக்கம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்க் கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் காய், கனி பயிா்களில் உயா்... மேலும் பார்க்க

வழிபாட்டு உரிமைக் கோரி சாலை மறியல்

பெரம்பலூா் அருகே கோயில் திருவிழாவில், வழிபாட்டு உரிமைக்கோரி ஒரு சமூகத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை தெற்கு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவி... மேலும் பார்க்க

சமூக தரவு கணக்கெடுப்புப் பணிக்கு ஒத்துழைக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூகதரவு கணக்கெடுக்கும் பணிக்கு ஒத்துழைக்க வேண்டுமென, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை

பெரம்பலூா் அருகே வெறி நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட... மேலும் பார்க்க

மகளிருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தல்

மகளிருக்கு எதிரான அனைத்து குற்ற வழக்குகளையும் விரைவாக முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தினாா். பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

பொதுப் பாதையை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தொண்டமாந்துறை ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள், மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க