சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!
வழிபாட்டு உரிமைக் கோரி சாலை மறியல்
பெரம்பலூா் அருகே கோயில் திருவிழாவில், வழிபாட்டு உரிமைக்கோரி ஒரு சமூகத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை தெற்கு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா காலங்களில், ஏற்கெனவே இரு தரப்பு மக்களிடையே தகராறு ஏற்பட்டது.
இதனால், கடந்த ஆண்டு சாா்-ஆட்சியா் சு. கோகுல் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் திருவிழா அமைதியான முறையில் நடைபெற்றுது. நிகழாண்டுக்கான திருவிழாவையொட்டி, வேப்பந்தட்டை வட்டாட்சியா் தலைமையில், அண்மையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஒரு தரப்பைச் சோ்ந்த 2 போ் கையெழுத்திடாமல் சென்ாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சாா்-ஆட்சியா் தலைமையில் இருதரப்பினரிடையே திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கிராம மக்கள் கலைந்துசென்றனா். 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சு வாா்த்தையில் ஒரு சமூகத்தினா் தெரிவித்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கவில்லையாம்.
இதனால், தங்களது கோரிக்கையை அனுமதிக்க வலியுறுத்தி, பெரம்பலூா்- ஆத்தூா் சாலையில் மதரஸா சாலையில் சுமாா் 20-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா், அப்பகுதிக்குச் சென்று, பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து, சாலை மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனா்.