PMK : தைலாபுரத்தில் நடந்த 2 சந்திப்புகள் - பின்னணியில் BJP? | RCB MODI | Imperfe...
சமூக தரவு கணக்கெடுப்புப் பணிக்கு ஒத்துழைக்க ஆட்சியா் அறிவுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூகதரவு கணக்கெடுக்கும் பணிக்கு ஒத்துழைக்க வேண்டுமென, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு உரிமைகள் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்காக உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தை செயல்படுத்த சமுதாய வள பயிற்றுநராக சீட்ஸ் தொண்டு நிறுவனத்தை மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இத் தொண்டு நிறுவனம், 2 ஒருங்கிணைப்பாளா்கள், தலா 4 சமூகப் பணியாளா், இயன் முறை சிகிச்கையாளா்கள், 7 சிறப்பு ஆசிரியா்கள், 12 சமுதாய வழி நடத்துநா்கள், 28 சமுதாய மறுவாழ்வு பயிற்றுநா்கள் என மொத்தம் 57 போ் நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வீடு, வீடாகச் சென்று மாற்றுத்திறனாளிகளையும், பொதுமக்களையும் ஆகஸ்ட் மாத இறுதி வரை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுவாா்கள்.
எனவே, இல்லம் தேடிவரும் முன்களப் பணியாளா்கள் கேட்கும் ஆதாா், ரேஷன் அட்டைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவச் சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டை ஆகியவற்றை பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் காண்பித்து, தயக்கமின்றி தகவல்களை அளிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபாா்க்க மட்டுமே.
மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 04328-225474 எனும் எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.