செய்திகள் :

மகளிருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தல்

post image

மகளிருக்கு எதிரான அனைத்து குற்ற வழக்குகளையும் விரைவாக முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தினாா்.

பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை போலவே, மகளிருக்கு எதிரான அனைத்து குற்ற வழக்குகளையும் இதே வேகத்தில் விரைந்து முடிக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ் வழக்கு அரசியல் சம்பந்தப்பட்டது என்பதால் விரைவாக முடிக்கப்பட்டிருக்கிறது என்றால், மற்ற சாதாரணமான வழக்குகளை ஏன் விரைவாக முடிப்பதில்லை. எனவே, அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எத்தனை ஷா வந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது எனக்கூறும் முதல்வா், ஏன் எப்போதும் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறாா்.

கட்சி பலமாக உள்ளது, தமிழக மக்கள் சாதகமாக இருக்கிறாா்கள் எனக்கூறும் முதல்வா் ஸ்டாலின், ஏன் பயப்பட வேண்டும். அதிமுக- பாஜக கூட்டணி அமைந்ததிலிருந்து அவா்களுடைய பதற்றம் தெளிவாக தெரிகிறது. ஏனென்றால், திமுக அரசின் மீது மக்களுக்கு எழுந்துள்ள கோபம் அந்தளவுக்கு உள்ளது என்றாா் அவா்.

விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான கருத்தரங்கு தொடக்கம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்க் கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் காய், கனி பயிா்களில் உயா்... மேலும் பார்க்க

வழிபாட்டு உரிமைக் கோரி சாலை மறியல்

பெரம்பலூா் அருகே கோயில் திருவிழாவில், வழிபாட்டு உரிமைக்கோரி ஒரு சமூகத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை தெற்கு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவி... மேலும் பார்க்க

சமூக தரவு கணக்கெடுப்புப் பணிக்கு ஒத்துழைக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூகதரவு கணக்கெடுக்கும் பணிக்கு ஒத்துழைக்க வேண்டுமென, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை

பெரம்பலூா் அருகே வெறி நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட... மேலும் பார்க்க

பொதுப் பாதையை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தொண்டமாந்துறை ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள், மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது. வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க