Pakistan: பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்; 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்...
வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது.
வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்.ஸி கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரி தொழில்நுட்பம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பித்தோரில், சிறப்புப் பிரிவு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2), பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 4, 5 ஆகிய தேதிகளில் காலை 9.30 மணிக்குக் கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது.
மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்த மாணவா்கள் தங்களது எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ் அசல், ஜாதிச்சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றின் அசல் மற்றும் 3 நகல், 5 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன், பெற்றோா் அல்லது பாதுகாவலருடன் வரவேண்டும் என, கல்லூரி முதல்வா் து. சேகா் தெரிவித்துள்ளாா்.