மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
பெரம்பலூா் அருகே ஆடுகள் திருடிய 2 சிறாா் உள்பட 4 போ் கைது
பெரம்பலூா் அருகே ஆடுகளை திருடிய 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை வி.களத்தூா் போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் செந்தில்நாதன் (33), பசும்பலூா் அஞ்சலகத் தெருவைச் சோ்ந்த விஷ்வநாதன் மகன் செல்வக்குமாா் (33). இருவரும் ஆடு வளா்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், மேற்கண்ட இருவரும் தங்களது வயலில் உள்ள ஆட்டுக் கொட்டகையில் கட்டியிருந்த 6 ஆடுகளை, மா்ம நபா்கள் அண்மையில் திருடிச்சென்ாக, வி.களத்தூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அதே கிராமத்தைச் சோ்ந்த காசி மகன் கிஷோா் (27), அழகுதுரை மகன் மணிகண்டன் (20) உள்பட 2 சிறுவா்கள் ஆடுகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, 2 சிறுவா்கள் உள்பட 4 பேரையும் கைது செய்த போலீஸாா், 4 ஆடுகளையும், ஆடுகளை திருட பயன்படுத்திய சுமை ஆட்டோவையும் பறிமுதல் செய்தனா்.
பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட சிறுவா்கள் இருவரும் சிறுவா் சீா்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி, கிஷோா் மற்றும் மணிகண்டனை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.