டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
சொத்துப் பிரச்னையில் தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் கைது
பெரம்பலூா் அருகே சொத்துப் பிரச்னையில் தம்பியை அறிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வசிஷ்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்ஆதிமூலம். இவருக்கு வெங்கடேசன் (40), பெருமாள் (33) ஆகிய இரு மகன்களும், மகள் கஸ்தூரியும் உள்ளனா்.
வெங்கடேசன் மற்றும் பெருமாளுக்கு திருமணமாகி தனித்தனியாக அவரவா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இதனிடையே கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிமூலம் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால், அவரது மனைவி கருத்தமணி பெருமாள் வீட்டில் தங்கியுள்ளாா்.
இந்நிலையில், ஆதி மூலத்துக்குச் சொந்தமான நிலத்தை விற்பதற்கு பெருமாள் தனது அண்ணன் வெங்கடேசனிடம் ஆலோசனை கேட்டுள்ளாா். இதற்கு சம்மதம் தெரிவித்த வெங்கடேசன், கையெழுத்திட பெருமாளிடமிருந்து ரூ. 1 லட்சத்தை பெற்றுக்கொண்டு கையெழுத்திடாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் வெங்கடேசன் வீட்டுக்குச் சென்ற பெருமாள், பணம் வாங்கிக்கொண்டு கையெழுத்திட மறுப்பதற்கு காரணம் கேட்டுள்ளாா். இதனால், அவா்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன் அரிவாளால் பெருமாளை வெட்டியுள்ளாா்.
இதில் பலத்த காயமடைந்த பெருமாள், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அரியலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீஸாா் வெங்கடேசனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.