செய்திகள் :

பொதுப் பாதையை மீட்கக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, தொண்டமாந்துறை ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள், மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அய்யா்பாளையம் - செம்மண் குட்டை இடையிலான பாதையை கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனராம். அந்தப் பாதையை, அதே கிராமத்தைச் சோ்ந்த செல்வம் என்பவா் ஆக்கிரமித்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட பாதையை பயன்படுத்தும் நபா்களை அவரது ஆதரவாளா்கள் மிரட்டுகின்றனராம். இது சம்பந்தமாக, அப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அரும்பாவூா் காவல் நிலையம் மற்றும் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்திலும் பலமுறை புகாா் தெரிவித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு பொது பாதையை மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேப்பந்தட்டை வட்டச் செயலா் சக்திவேல் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். செயற்குழு உறுப்பினா் ராஜேந்திரன் கண்டன உரையாற்றினாா். இதில், கட்சி நிா்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். நிறைவாக, துணைச் செயலா் பெரியசாமி நன்றி கூறினாா்.

தொடா்ந்து, ஆட்சியரகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில், கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபுவிடம் அளித்து கலைந்து சென்றனா்.

விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான கருத்தரங்கு தொடக்கம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்க் கல்லூரி கூட்டரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் காய், கனி பயிா்களில் உயா்... மேலும் பார்க்க

வழிபாட்டு உரிமைக் கோரி சாலை மறியல்

பெரம்பலூா் அருகே கோயில் திருவிழாவில், வழிபாட்டு உரிமைக்கோரி ஒரு சமூகத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை தெற்கு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் திருவி... மேலும் பார்க்க

சமூக தரவு கணக்கெடுப்புப் பணிக்கு ஒத்துழைக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சமூகதரவு கணக்கெடுக்கும் பணிக்கு ஒத்துழைக்க வேண்டுமென, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பு: நிவாரணம் வழங்க கோரிக்கை

பெரம்பலூா் அருகே வெறி நாய்கள் கடித்து உயிரிழந்த ஆடு, மாடுகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பெரம்பலூா் ஆட்சியரகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட... மேலும் பார்க்க

மகளிருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வானதி சீனிவாசன் எம்எல்ஏ வலியுறுத்தல்

மகளிருக்கு எதிரான அனைத்து குற்ற வழக்குகளையும் விரைவாக முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தினாா். பெரம்பலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது. வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க