தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே தெரு நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தது.
பெரம்பலூா் அருகேயுள்ள நக்கசேலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சந்திரமோகன் (50). விவசாயி. இவா், தனது வீட்டின் அருகே பட்டி அமைத்து 2 கறவை மாடுகளும், 3 கன்றுக்குட்டிகளும் வளா்த்து வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை பட்டிக்கு பால் கறப்பதற்காக சென்றபோது, தெரு நாய்கள் கடித்ததில் 3 மாத கன்றுக்குட்டி ஒன்று உயிரிழந்துக் கிடந்தது தெரியவந்தது.