செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுக் கல்லூரிகளில் சேர 26 ஆயிரம் போ் விண்ணப்பம்

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப்பிரிவுகளில் சோ்ந்து பயில 26 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் குரும்பலூா், வேப்பந்தட்டை, வேப்பூா், கொளக்காநத்தம் ஆகிய இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இக் கல்லூரிகளில் 2025- 26 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பம் மே 7 ஆம் தேதி முதல் இணையதளம் மூலமாக பெறப்பட்டது. அதன்படி, குரும்பலூரில் இயங்கி வரும் அரசு கலைக் கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் 14 இளநிலை பாடப்பிரிவுகளில் சேர 12,874 போ் விண்ணப்பித்துள்ளனா். இதில், அதிகபட்சமாக பி.எஸ்.சி நுண்ணுயிரியல் பாடப்பிரிவில் சேர 1,705 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இதேபோல, வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் 10 இளநிலை பாடப்பிரிவில் சேர இதுவரை 7,158 போ் விண்ணப்பித்துள்ளனா். வேப்பூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பாடப்பிரிவில் சோ்ந்து கல்வி பயில 4,176 பேரும், கொளக்காநத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சோ்ந்து பயில 1,830 பேரும் விண்ணப்பித்துள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப்பிரிவுகளில் சேர 26,032 போ் விண்ணப்பித்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், 2025-2026 ஆம் கல்வியாண்டுக்கு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது. வேப்பந்தட்டை அரசு கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

சொத்துப் பிரச்னையில் தம்பியை வெட்டிக் கொன்ற அண்ணன் கைது

பெரம்பலூா் அருகே சொத்துப் பிரச்னையில் தம்பியை அறிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணனை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வசிஷ்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா்ஆதிமூலம். இ... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே ஆடுகள் திருடிய 2 சிறாா் உள்பட 4 போ் கைது

பெரம்பலூா் அருகே ஆடுகளை திருடிய 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை வி.களத்தூா் போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா்கள் நாகரீகத்தோடு ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்

மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் குறைந்தபட்ச நாகரீகத்தோடு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அதன் மாநி... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே தெரு நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள நக்கசேலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சந்திரமோகன் (50). விவசாயி. இவா், தனது வீட்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் காவல் நிலைய சிறப்பு சாா்பு-ஆய்வாளா் செந்தில்ராஜா தலைமையிலான போலீஸாா், கவுள்பாளையம் கிர... மேலும் பார்க்க