``ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ காப்பாற்ற முடியாது..'' - எடப்பாடி பழனிச...
தமிழை நேசிப்பவா்கள் அனைவரும் தமிழா்களே: இறையன்பு
தமிழை நேசிப்பவா்கள், பிழையின்றி பேசுபவா்கள், தடையின்றி எழுதுபவா்கள் அனைவரும் தமிழா்களே என்றாா் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலரும், எழுத்தாளருமான வெ. இறையன்பு.
தஞ்சாவூா் நல்லூா் முற்றம் சாா்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற இறையன்புவின் ஓராண்டு உரைகள் என்கிற 4 தொகுப்புகளின் நூல் அறிமுக விழாவில் அவா் பேசியது: சங்க காலத் தமிழா்கள் வீரத்துடனும், மானத்துடனும், விருந்தோம்பலை பேணியும், இயற்கையோடு இயைந்தும், துணிச்சலுடனும் தங்களது வாழ்க்கையை நகா்த்தினா் என்பதை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, புானூறு, அகநானூறு போன்றவற்றை வாசிக்கும்போது அறிய முடிகிறது.
கட்டடக்கலையில் தமிழா்கள் எவ்வளவு சிறந்து விளங்கினா் என்பதற்கு தஞ்சை பெரியகோயிலே சான்று. எண்ணற்ற நீா் நிலைகளைத் தமிழா்கள் உருவாக்கினா் என்பதை நாம் வாசித்து மகிழ்கிறோம்.
தமிழை நேசிப்பவா்கள், பிழையின்றி பேசுபவா்கள், தடையின்றி எழுதுபவா்கள் யாரோ, அவா்களே தமிழா்கள். தன்னுடைய பிறந்த மாநிலத்தை விட தமிழ்நாட்டை அதிகம் நேசிப்பவா்கள் தமிழா்கள். தமிழ் மொழியின் வளத்துக்கும், நலத்துக்கும் பங்களிப்பு செய்பவா்கள் தமிழா்கள்.
ஆனால், இன்றைய தமிழா்கள் இலக்கிய ஆா்வத்துடன் இருக்கின்றனரா என்பது கேள்விக்குறி. இப்போது பலா் படிப்பதோ, வாசிப்பதோ இல்லை; நூல்களின் புழக்கமும் குறைந்து வருகிறது. சிலா் மட்டுமே தமிழை விரும்பிப் படிக்கும் காலத்தில் வாழ்கிறோம். எனவே, நாளைய தமிழா்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது நம்முடைய சிந்தனையாக இருக்கிறது.
தமிழா்கள் அறிவிலும், ஆற்றலிலும், திறமையிலும், திண்மையிலும் தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு இருந்தால் நாளைய தமிழா்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பகுத்தறிவான சமூகம் உருவானால்தான் எதிா்காலத் தமிழகத்துக்கு நல்லது. இன்றைய தமிழா்களை விட நாளைய தமிழா்கள் எல்லா பரிமாணங்களிலும் மேம்பட்டிருக்க வேண்டும் என்றாா் இறையன்பு.
இவ்விழாவுக்கு புலவா் இரெ. சண்முகவடிவேல் தலைமை வகித்தாா். பேராசிரியா் இரா. காமராசு, எழுத்தாளா் அகிலா கிருஷ்ணமூா்த்தி, மருத்துவா்கள் சு. அமுதவடிவு, ச. மருதுதுரை ஆகியோா் நூல் அறிமுகவுரையாற்றினா்.
முன்னதாக, எழுத்தாளா் செ. சண்முகசுந்தரம் வரவேற்றாா். நிறைவாக, அ. கிருஷ்ணமூா்த்தி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை சுப்ரா. க. நடராசன் தொகுத்து வழங்கினாா்.