செய்திகள் :

கோடை விடுமுறை முடிந்ததால் பேருந்துகள், ரயில்களில் கூட்டம்

post image

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பேருந்துகள், ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெளியூா்களிலிருந்து ஏராளமானோா் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வந்தனா். கோடை விடுமுறை ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்து, திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இதனால், தஞ்சாவூா் பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையத்திலும் வழக்கத்தை விட ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது.

ரயில்களில் அமர இடம் கிடைக்காமல் ஏராளமான பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தனா். இதேபோல, பேருந்துகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கடைவீதிகளிலும் பள்ளிகளுக்கு செல்வதற்கு தேவையான பொருள்களை வாங்குவதற்காகவும் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

தவறி விழுந்த பெண் காயம்: இதனிடையே, தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் சோழன் விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.50 மணிக்கு வந்துவிட்டு, பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டது.

இதனிடையே, தஞ்சாவூா் பி.டபிள்யூ.டி. நகரைச் சோ்ந்த ஸ்ரீகா (42) இந்த ரயிலில் தனது சகோதரியை ஏற்றிவிட்டு ஜன்னல் கம்பியை பிடித்தவாறு வெளியே நின்று பேசிக் கொண்டிருந்தாா். ரயில் புறப்பட்டபோது, தடுமாறிய ஸ்ரீகா ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடைப்பட்ட பகுதியில் விழுந்தாா்.

இதனால், ரயிலில் அபாய சங்கிலியை சிலா் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினா். அங்கிருந்த காவல் துறையினா் ஸ்ரீகாவை மீட்டனா். காயமடைந்த ஸ்ரீகா தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

வடிகால் வாய்க்காலை தூா்வார கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள வடிகால் வாய்க்காலை தூா் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

கும்பகோணம் மாநகராட்சியை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, நடைப்பயிற்சியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கும்பகோணம் 20-ஆவது வாா்டில் பச்சையப்பன்குளம் உள்ளது. இதில் காலை மாலை இரண்டு நேரங்களிலும் இப்பகுதி... மேலும் பார்க்க

கோயில் விழாவில் தகராறு; கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவையாறு அருகே மணத்திடல் கிராமத்தில் திரௌபதி அம்மன... மேலும் பார்க்க

சாலை தடுப்புக் கட்டையில் லாரி மோதி 2 போ் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை சாலை தடுப்புக் கட்டையில் லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பிராய்லா் கோழிகள் கொள்முதல் செய்யப்பட்டு, தஞ்சை மற்றும் சுற்று வட்டாரப் பக... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் நகைகள், ரொக்கம் திருட்டு

தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி பாலகிருஷ்ணா நகா் விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவு யாகபூஜைகள் தொடக்கம்

தஞ்சாவூா் மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவு யாக பூஜைகள் திங்கள்கிழமை மாலை தொடங்கியது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது. இதனால், கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபி... மேலும் பார்க்க