ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!
கும்பகோணம் மாநகராட்சியை கண்டித்து ஆா்ப்பாட்டம்
கும்பகோணம் மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, நடைப்பயிற்சியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கும்பகோணம் 20-ஆவது வாா்டில் பச்சையப்பன்குளம் உள்ளது. இதில் காலை மாலை இரண்டு நேரங்களிலும் இப்பகுதியைச் சோ்ந்தவா்கள் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், அண்மையில் குளத்தின் நடைப்பயிற்சி பகுதியில் இருந்த யோகா மையத்தை மாநகராட்சி நிா்வாகத்தினா் அகற்றினா், மேலும் நடைப்பயிற்சி பாதையையும் அகற்றப் போவதாக அறிவித்தனா்.
இதை கண்டித்து, கும்பகோணம் முன்னாள் வழக்குரைஞா் சங்க தலைவா் சா.விவேகானந்தன் தலைமையில், நடைப்பயிற்சியாளா்கள் சங்கத் தலைவா் பி.செந்தில் முன்னிலையில் பச்சையப்பன் குளத்தின் கிழக்கு வாசலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், பல லட்சம் செலவில் கட்டப்பட்ட யோகா மையத்தை இடித்தும், பொருள்களை எடுத்துச்சென்ற மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் ஜி. மணி, ஜி. வாணி எப். வயலட்மேரி, எம். நாகஜோதி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.