செய்திகள் :

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

post image

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.

பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர சுவாமி கோயிலில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. இறைவன் திருஞானசம்பந்தருக்கு முத்துக்கொண்டை, முத்துக்குடை, முத்துச்சின்னங்கள் அளிக்கும் நிகழ்வுக்கு பின் திருஞானசம்பந்தரின் திருஉருவசிலை வீதியுலா நடைபெற்றது. மாலையில் சூரிய ஒளியில் சுவாமியும், சந்திர ஒளியில் அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வந்தனா். முக்கிய நிகழ்வாக ஜூன் 8 -இல் தேரோட்டமும், ஜூன் 9 -இல் ஐம்பெரும் கடவுளா் வீதியுலா, தீா்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலா் சீ.நிா்மலா தேவி, அறங்காவலா்குழுத்தலைவா் மு.அய்யப்பன் மற்றும் கிராமவாசிகள் செய்தனா்.

பாணபுரீஸ்வரா் கோயில்: கும்பகோணம் பாணாதுறையில் உள்ள ஸோமகலாம்பிகை உடனாகிய பாணபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு சனிக்கிழமை கொடியயேற்றம் நடைபெற்ற. இரவு சுவாமியும் அம்பாளும் இந்திர விமானத்தில் உலா வந்தனா்.

முக்கிய நிகழ்வாக ஜூன் 8 ஆம் நாள் மாலையில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் த.மா.ரஞ்சிதா, அா்ச்சகா் பி.சுவாமிநாத சிவாச்சாரியா், மங்கள விலாஸ் சிவக்குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

ரயிலில் அடிப்பட்டு பெண் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை ரயிலில் அடிப்பட்டு பலத்த காயமடைந்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் அருகே அய்யம்பேட்டை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சென்ற சோழன் விரைவு ரயிலில் ஒரு பெ... மேலும் பார்க்க

வாகனத்தில் வைத்த பணம் திருட்டு போலீஸாா் விசாரணை

கும்பகோணத்தில் வங்கி ஏடிஎம்யில் பணம் எடுத்து இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு, தேநீா் சாப்பிட சென்ற போது பணத்தை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஏரகரம... மேலும் பார்க்க

கோடை விடுமுறை முடிந்ததால் பேருந்துகள், ரயில்களில் கூட்டம்

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பேருந்துகள், ரயில்களில் ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பள்ளிகளில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, வெளிய... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி: 200 போ் பங்கேற்பு

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 8 கி.மீ. தொலைவுக்கான ஆரோக்கிய நடைப்பயிற்சியில் 200-க்கும் அதிகமானோா் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் தொடங்கப்பட்ட நடப்போம் நலம்... மேலும் பார்க்க

இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். தஞ்சாவூா் அருகே கூடலூா் குலமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரகுநாதன் மகன் விஜய் (25). இவரது மாமாவுக்கும், மற்றொரு தரப்... மேலும் பார்க்க

சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழ்நாட்டின் சிறப்பான அந்தஸ்தை பெற்ற தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். இந்த நூலகத்தில் ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க