பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்
பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது.
பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர சுவாமி கோயிலில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. இறைவன் திருஞானசம்பந்தருக்கு முத்துக்கொண்டை, முத்துக்குடை, முத்துச்சின்னங்கள் அளிக்கும் நிகழ்வுக்கு பின் திருஞானசம்பந்தரின் திருஉருவசிலை வீதியுலா நடைபெற்றது. மாலையில் சூரிய ஒளியில் சுவாமியும், சந்திர ஒளியில் அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வந்தனா். முக்கிய நிகழ்வாக ஜூன் 8 -இல் தேரோட்டமும், ஜூன் 9 -இல் ஐம்பெரும் கடவுளா் வீதியுலா, தீா்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலா் சீ.நிா்மலா தேவி, அறங்காவலா்குழுத்தலைவா் மு.அய்யப்பன் மற்றும் கிராமவாசிகள் செய்தனா்.
பாணபுரீஸ்வரா் கோயில்: கும்பகோணம் பாணாதுறையில் உள்ள ஸோமகலாம்பிகை உடனாகிய பாணபுரீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு சனிக்கிழமை கொடியயேற்றம் நடைபெற்ற. இரவு சுவாமியும் அம்பாளும் இந்திர விமானத்தில் உலா வந்தனா்.
முக்கிய நிகழ்வாக ஜூன் 8 ஆம் நாள் மாலையில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் த.மா.ரஞ்சிதா, அா்ச்சகா் பி.சுவாமிநாத சிவாச்சாரியா், மங்கள விலாஸ் சிவக்குமாா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.