செய்திகள் :

சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

post image

தமிழ்நாட்டின் சிறப்பான அந்தஸ்தை பெற்ற தஞ்சாவூா் சரசுவதி மகால் நூலகத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.

இந்த நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆய்வு செய்த அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தமிழ்நாட்டின் கலாசாரத்தை இதுபோன்ற நூலகங்களில் கிடைக்கக்கூடிய ஓலைச்சுவடிகள், காகிதச் சுவடிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

எனவே, தமிழ்நாட்டின் சிறப்பான அந்தஸ்து பெற்ற இந்த நூலகத்தில், மழை நீா் கசிவுகள் இருக்கக்கூடாது என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டது. இதற்காக அருகிலேயே புதிதாகக் கட்டடம் கட்டி, சில தளவாடப் பொருள்களை அங்கு மாற்றி பாதுகாப்பாக வைக்கலாம் என ஆலோசிக்கப்படுகிறது.

இதற்கு தேவையான நிதி, கருத்துருக்களை ஆட்சியா் கொடுத்துள்ளாா். 6 மாதங்களுக்கு ஒரு முறை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றாலும், மேலும், தேவைகள் இருப்பதாக ஆட்சியா் தெரிவித்ததையும் அறிக்கையாகப் பெற்றுள்ளோம். இவற்றைத் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்.

இந்த நூலகத்துக்கு மாநில அரசு ஒரு தொகையும், மத்திய அரசு ஒரு தொகையும் ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், மத்திய அரசு நிதி ஒதுக்கீடு அவ்வப்போது நிறுத்தியிருந்தாலும், மாநில அரசு நிறுத்தாமல், ஊதியம், ஓய்வூதியப் பலன்கள், மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதியை எக்காலத்திலும் நிறுத்தியதில்லை. இந்த நூலகத்தில் தற்போது போதுமான பணியாளா்கள் உள்ளனா். இன்னும் கூடுதல் பணியாளா்களை நியமிப்பது தொடா்பான அறிக்கையும் பெற்றுள்ளோம்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கை தொடா்பாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், தமிழக முதல்வா் கூறியபடி வழக்குத் தொடுப்பதற்கான பணி நடைபெறுகிறது.

கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை தொடங்குகிறது. பள்ளிக்கூடம் தொடங்கு நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், பை உள்ளிட்ட விலையில்லாப் பொருள்கள் வழங்கப்படும். ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்பது காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போன்ற கருத்தாகத்தான் பாா்க்கிறேன் என்றாா் அமைச்சா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், சரசுவதி மகால் நூலக நிா்வாக அலுவலா் எஸ். மாா்ஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வடிகால் வாய்க்காலை தூா்வார கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டம் அம்மாபேட்டை அருகேயுள்ள வடிகால் வாய்க்காலை தூா் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

கும்பகோணம் மாநகராட்சியை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கும்பகோணம் மாநகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, நடைப்பயிற்சியாளா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கும்பகோணம் 20-ஆவது வாா்டில் பச்சையப்பன்குளம் உள்ளது. இதில் காலை மாலை இரண்டு நேரங்களிலும் இப்பகுதி... மேலும் பார்க்க

கோயில் விழாவில் தகராறு; கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கோயில் விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவையாறு அருகே மணத்திடல் கிராமத்தில் திரௌபதி அம்மன... மேலும் பார்க்க

சாலை தடுப்புக் கட்டையில் லாரி மோதி 2 போ் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை சாலை தடுப்புக் கட்டையில் லாரி மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பிராய்லா் கோழிகள் கொள்முதல் செய்யப்பட்டு, தஞ்சை மற்றும் சுற்று வட்டாரப் பக... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் நகைகள், ரொக்கம் திருட்டு

தஞ்சாவூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் அருகே பிள்ளையாா்பட்டி பாலகிருஷ்ணா நகா் விரிவாக்கப் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவு யாகபூஜைகள் தொடக்கம்

தஞ்சாவூா் மாரியம்மன் கோயிலில் தைலாபிஷேக நிறைவு யாக பூஜைகள் திங்கள்கிழமை மாலை தொடங்கியது. இக்கோயிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது. இதனால், கருவறையில் உள்ள அம்பாளுக்கு அபி... மேலும் பார்க்க