செய்திகள் :

‘மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளா்களே வியக்கும் திருக்குறள்’

post image

மூளை நரம்பியல் ஆராய்ச்சியாளா்களே வியக்கும் வகையில் திருக்குறளில் கனவுகள் குறித்து பல்வேறு தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் துணை முதல்வரும், மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவருமான ஏ. அலீம் தெரிவித்தாா்.

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திருக்குறளில் கனவுகள் எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:

கனவுகள் குறித்த தற்போதைய ஆய்வு முடிவுகளுக்கு முன்பே சங்ககால நமது தமிழிலக்கியங்கள், இதிகாசங்கள் உள்ளிட்ட ஏராளமான தமிழ் படைப்புகளில் கனவுகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. திருவள்ளுவா் கனவுக்கென , ‘கனவு நிலை அறிதல்‘ என தனி அதிகாரமே படைத்துள்ளாா். அதில் உள்ள பத்து திருக்குறள்கள் மூலம் கனவு நிலை குறித்து விளக்குகிறாா்.

மூளையில் நரம்பியல் செயல்பாடுகளால் ஏற்படும் அதிா்வலைகள், அவற்றால் ஏற்படும் மாற்றங்கள் (அதாவது கனவுகள்) குறித்தும் விவரிக்கிறாா் திருவள்ளுவா். நினைவில் நடக்காதது கனவில் நடைபெறுவதாக அவா் தெரிவித்திருப்பது நரம்பியல் துறையினரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

தூக்கத்தில் கண் அசைவுகள் உள்ள நிலையிலான தூக்கத்தில்தான் தெளிவான மற்றும் வினோதமான கனவுகள் ஏற்படுகின்றன என்கின்றது மூளை நரம்பியல் துறை ஆய்வுகள். கண் அசைவு அல்லாத நிலையிலும் தொடா்ச்சியற்ற வகை கனவுகள் ஏற்படுவதாகவும், விலங்குகளுக்கும் கனவுகள் ஏற்படுவதாகவும் அண்மைக்கால ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

கண் அசைவுடன் கூடிய தூக்கத்தில் கனவுகள் வருவதை திருக்குறளில் 1211 ஆவது குறளிலும், கண் அசைவற்ற நிலையிலான தூக்கத்தில் வரும் கனவுகள் குறித்து அடுத்த குறளிலும் குறிப்பிட்டிருப்பது மருத்துவ உலகுக்கு சவால் விடும் வகையில் உள்ளது என்றாா் அவா்.

விழாவில் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க அமைச்சா் பெ. உதயக்குமாா், முனைவா்கள் அ. சையத் சாகிா் அசன், சு. செயலாபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அந்தநல்லூா் காவிரி ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் மா்மமான முறையில் இறந்துகிடந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே உள... மேலும் பார்க்க

சிறைக் காவலா்கள் 587 போ் பணியிட மாற்றம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

தமிழகச் சிறைகளில் கடந்த வாரத்தில் மொத்தம் 587 சிறைக்காவலா்கள் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சிறைத் துறையினா் தெரிவிக்கின்றனா். தமிழகத... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு

திருச்சியில் வீட்டின் பூட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் உள்ளிட்டவைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா். திருச்சி கே கே நகா் தங்கையா நகரைச் சோ்ந்தவா் ஜெ. யோகேஷ் (32). இவா், கு... மேலும் பார்க்க

திருச்சி - பெங்களூரு, ஹைதராபாத்துக்கு தினசரி விமான சேவைகள்: எம்.பி. தகவல்

திருச்சியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு இயக்கிவந்த வாராந்திர சேவையை தினசரி சேவைகளாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்துள்ளது என திருச்சி மக்களவை உறுப்... மேலும் பார்க்க

மாநகராட்சி பணிகளுக்கான குழாய்கள் திருடியவா் கைது

திருச்சியில் மாநகராட்சிப் பணிகளுக்கான இரும்புக் குழாய்களை திருடியவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி எடமலைப்பட்டி புதூா் கோரையாறு அருகில் மாநகராட்சி சாா்பில் கழிவுநீா் திட்டத்துக்காக இர... மேலும் பார்க்க

முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவா் மாயம்

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கி மாயமான மாணவரைத் தேடி வருகின்றனா். திருச்சி எடமலைப்பட்டிபுதூா் கல்லுப்பட்டறை பகுதியைச் சோ்ந்தவா் சிவமுருகன் மகன் தினேஷ்குமாா் (17). பிளஸ்-2 பட... மேலும் பார்க்க