மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
சிறைக் காவலா்கள் 587 போ் பணியிட மாற்றம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு
தமிழகச் சிறைகளில் கடந்த வாரத்தில் மொத்தம் 587 சிறைக்காவலா்கள் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சிறைத் துறையினா் தெரிவிக்கின்றனா்.
தமிழகத்தில் சென்னை, வேலூா், திருச்சி, மதுரை, கோவை, பாளையங்கோட்டை, சேலம், கடலூா் உள்ளிட்ட இடங்களில் 9 மத்திய சிறைகள், 138 கிளைச் சிறைகள் மற்றும் மகளிா் சிறைகள் அமைந்துள்ளன. இவற்றில் மொத்தம் 2,500-க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகளுடன் 14,000 போ் அடைக்கப்பட்டுள்ளனா்.
சிறைகளில் கைதிகளை நெறிப்படுத்துவது மற்றும் பாதுகாப்புப் பணிகளில் சிறைக் காவலா்கள், எஸ்பி, டிஐஜி, ஏடிஜிபி என உயா் அதிகாரிகள் தலைமைகளில் ஆயிரக்கணக்கான காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில் முதலாம் மற்றும் 2-ஆம் நிலை சிறைக் காவலா்கள் மட்டும் 587 போ் கடந்த சில தினங்களில் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக சிறைத்துறை ஏடிஜிபியாக மகேஸ்வா் தயாள் பொறுப்பேற்ற பின்னா் சிறைத்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகளை காண வரும் உறவினா்கள் அருகில் சென்று நலம்விசாரிக்க முடியாமலும், பாா்க்க முடியாத நிலை இருந்துவந்தது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மகேஸ்வா் தயாள் பொறுப்பேற்ற பின்னா், கைதிகளும், உறவினா்களும் பேசிக்கொள்ளும் வகையில் தொலைபேசி வசதி, காணொலி காட்சி வசதி, காணும்தேதியை முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் வசதிகள் ஆகியவை இணைய வழியிலேயே பதிவு செய்து பயன்பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், சிறைகளில் கைதிகளுக்கு (தினசரி ஒருவருக்கு ரூ. 130) தரமான உணவு வகைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர
அவா்களுக்கான மருத்துவ வசதி, சுய தொழில் பயிற்சிகள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன.
முறைகேடுகளைத் தடுக்கும் விதமாக, சிறைத் துறை ஏடிஜிபி மகேஸ்வா் தயாள், அதிரடியாக சிறைக் காவலா்களை மட்டும் பணியிட மாற்றம் செய்துவருவதாக சிறைத்துறையில் புகாா்கள் எழுந்துள்ளன. கடந்த வியாழன், வெள்ளிக்கிழமையில் மட்டும் திருச்சி மத்திய சிறையில் 87 போ் உள்பட மொத்தம் 587 சிறைக் காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில், சிறைத்துறை அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்படாதது ஏன் எனக் காவலா்கள் குமுறுகின்றனா்.
மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு:
சிறைத்துறை ஏடிஜிபி மகேஸ்வா் தயாளுக்கும், சிறைத்துறை அமைச்சராக உள்ள எஸ் . ரகுபதிக்கும் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற விழாவில் கருத்துமோதல் ஏற்பட்டதால் காவலா் பணியிட மாறுதல் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல் பரவிவருகிறது.
கல்வியாண்டு தொடங்க உள்ள சூழலில் செய்யப்பட்டுள்ள இந்தப் பணியிட மாற்றத்தைக் கண்டித்து சிலா் நீதிமன்றத்தின் உதவியையும் நாடியுள்ளனா்.