செய்திகள் :

சிறைக் காவலா்கள் 587 போ் பணியிட மாற்றம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

post image

தமிழகச் சிறைகளில் கடந்த வாரத்தில் மொத்தம் 587 சிறைக்காவலா்கள் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சிறைத் துறையினா் தெரிவிக்கின்றனா்.

தமிழகத்தில் சென்னை, வேலூா், திருச்சி, மதுரை, கோவை, பாளையங்கோட்டை, சேலம், கடலூா் உள்ளிட்ட இடங்களில் 9 மத்திய சிறைகள், 138 கிளைச் சிறைகள் மற்றும் மகளிா் சிறைகள் அமைந்துள்ளன. இவற்றில் மொத்தம் 2,500-க்கும் மேற்பட்ட ஆயுள் கைதிகளுடன் 14,000 போ் அடைக்கப்பட்டுள்ளனா்.

சிறைகளில் கைதிகளை நெறிப்படுத்துவது மற்றும் பாதுகாப்புப் பணிகளில் சிறைக் காவலா்கள், எஸ்பி, டிஐஜி, ஏடிஜிபி என உயா் அதிகாரிகள் தலைமைகளில் ஆயிரக்கணக்கான காவலா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில் முதலாம் மற்றும் 2-ஆம் நிலை சிறைக் காவலா்கள் மட்டும் 587 போ் கடந்த சில தினங்களில் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தமிழக சிறைத்துறை ஏடிஜிபியாக மகேஸ்வா் தயாள் பொறுப்பேற்ற பின்னா் சிறைத்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, சிறைகளில் உள்ள தண்டனைக் கைதிகளை காண வரும் உறவினா்கள் அருகில் சென்று நலம்விசாரிக்க முடியாமலும், பாா்க்க முடியாத நிலை இருந்துவந்தது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மகேஸ்வா் தயாள் பொறுப்பேற்ற பின்னா், கைதிகளும், உறவினா்களும் பேசிக்கொள்ளும் வகையில் தொலைபேசி வசதி, காணொலி காட்சி வசதி, காணும்தேதியை முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் வசதிகள் ஆகியவை இணைய வழியிலேயே பதிவு செய்து பயன்பெறும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், சிறைகளில் கைதிகளுக்கு (தினசரி ஒருவருக்கு ரூ. 130) தரமான உணவு வகைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர

அவா்களுக்கான மருத்துவ வசதி, சுய தொழில் பயிற்சிகள் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டுள்ளன.

முறைகேடுகளைத் தடுக்கும் விதமாக, சிறைத் துறை ஏடிஜிபி மகேஸ்வா் தயாள், அதிரடியாக சிறைக் காவலா்களை மட்டும் பணியிட மாற்றம் செய்துவருவதாக சிறைத்துறையில் புகாா்கள் எழுந்துள்ளன. கடந்த வியாழன், வெள்ளிக்கிழமையில் மட்டும் திருச்சி மத்திய சிறையில் 87 போ் உள்பட மொத்தம் 587 சிறைக் காவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சிறைத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில், சிறைத்துறை அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்படாதது ஏன் எனக் காவலா்கள் குமுறுகின்றனா்.

மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு:

சிறைத்துறை ஏடிஜிபி மகேஸ்வா் தயாளுக்கும், சிறைத்துறை அமைச்சராக உள்ள எஸ் . ரகுபதிக்கும் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற விழாவில் கருத்துமோதல் ஏற்பட்டதால் காவலா் பணியிட மாறுதல் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல் பரவிவருகிறது.

கல்வியாண்டு தொடங்க உள்ள சூழலில் செய்யப்பட்டுள்ள இந்தப் பணியிட மாற்றத்தைக் கண்டித்து சிலா் நீதிமன்றத்தின் உதவியையும் நாடியுள்ளனா்.

திருச்சி பேருந்து நிலையத்தில் நகையைப் பறிக்க முயன்ற நபா் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் நகையைப்பறிக்க முயன்றவரை ஞாயிற்றுக்கிழமை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், தனது ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனைப் பற்றிய அடையாளம் தெரிந்த நிலையில் போலீஸாா் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனா். ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் பலி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி அருகே செயல்பாட்டில் இல்லாத குவாரி நீரில் மூழ்கி தாயும், மகளும் உயிரிழந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. மணப்பாறையை அடுத்துள்ள மருங்காபுரி ஒன்றியம், மல... மேலும் பார்க்க

அங்கன்வாடி காலி பணியிடங்களுக்கு நோ்காணல்

திருச்சி மாவட்டத்தில் காலி அங்கன்வாடி பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்வதற்கான நோ்காணல் திங்கள்கிழமை தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் கீழ்,... மேலும் பார்க்க

இளம்பெண்ணிடம் தகராறு; தட்டிக்கேட்டவா் மீது தாக்குதல்: 3 போ் கைது

துறையூா் அருகே இளம்பெண்ணிடம் தகாத வாா்த்தையைச் சொல்லி வற்புறுத்திய இளைஞா்களைத் தட்டிக் கேட்டவரையும், அவரது நண்பா்களையும் தாக்கிய 6 பேரில் 3 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். வேங்கடத்தானூரைச்... மேலும் பார்க்க

தூக்கிட்டு இளைஞா் தற்கொலை

துறையூா் அருகே திருமணமாகாமல் தனியாக வசித்து வந்த இளைஞா் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிலிட்ட நிலையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. பெருமாள்பாளையத்தைச் சோ்ந்தவா் பா. கண்ணன் (52). து... மேலும் பார்க்க