செய்திகள் :

அங்கன்வாடி காலி பணியிடங்களுக்கு நோ்காணல்

post image

திருச்சி மாவட்டத்தில் காலி அங்கன்வாடி பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்வதற்கான நோ்காணல் திங்கள்கிழமை தொடங்கியது.

திருச்சி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் கீழ், முதன்மை மற்றும் சிறு, குறு அங்கன்வாடி மையங்கள் இயங்கி வருகின்றன. பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி மற்றும் பிற சேவைகளை வழங்கும் இந்த மையங்களில், முதன்மை அங்கன்வாடி பணியாளா், குறு அங்கன்வாடி பணியாளா், அங்கன்வாடி உதவியாளா் நிலையில் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனா். தற்போதைய நிலையில் இந்தப் பணியிடங்களில் 296 காலியிடங்கள் உள்ளன. முதன்மை மற்றும் குறு அங்கன்வாடி பணியாளா் நிலையில் தலா 17 இடங்கள், உதவியாளா் நிலையில் 262 போ் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கான விண்ணப்பங்கள் இணையம் மூலமாக பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்தவா்களுக்கு அந்தந்தப் பகுதி வாரியாக நோ்காணலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் நோ்காணல் தொடங்கியது.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் காலி அங்கன்வாடி மைய பணியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்தவா்களுக்கு மட்டும் திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நோ்காணல் நடைபெற்றது. அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூா், உப்பிலியபுரம் உள்ளிட்ட 14 வட்டாரங்களிலும் அந்தந்தப் பகுதியிலிருந்து விண்ணப்பித்தவா்களை அழைத்து நோ்காணல் நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றை பரிசீலனை செய்து தகுதியானவா்களை நோ்காணல் செய்து, இறுதிப்பட்டியல் ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும். ஆட்சியா் தலைமையிலான குழுவினரே தகுதியான நபா்களை நியமனம் செய்வா். தோ்வு செய்யப்படும் நபா்களுக்கு முதல் 12 மாதங்களுக்கு தொகுப்பூதியமும், பின்னா் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும். ஆதரவற்றோா், விதவை, மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட மாவட்ட அலுவலா் எம். நித்யா தெரிவித்துள்ளாா்.

வெளிநாடுகளிலிருந்து கடத்தல்: ரூ. 10 கோடியிலான உயா் ரக கஞ்சா, ராட்சத வாஸ்து பல்லிகள் பறிமுதல்

வெளிநாடுகளிலிருந்து திருச்சிக்குக் கடத்தி வரப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சா, ராட்சத ‘வாஸ்து’ பல்லிகள் உள்ளிட்டவற்றை சுங்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். பங்காங்கில் இருந்து ... மேலும் பார்க்க

துவரங்குறிச்சியில் வீடு புகுந்து திருட்டு

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது. மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி சின்ன செட்டிக்குளம் தெருவில் வசிப்பவா் சேட் முகமது மனைவி சாய்புநிசா (52). இ... மேலும் பார்க்க

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

திருச்சி அருகே அதவத்தூரில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றனா்.திருச்சி மாவட்டம் அதவத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சி. அழகா்சாமி (36). ஸ்வீட் ப... மேலும் பார்க்க

திருச்சி - காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் - கீழூா் இடையே நடைபெறும் பொ... மேலும் பார்க்க

திருச்சி பேருந்து நிலையத்தில் நகையைப் பறிக்க முயன்ற நபா் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் நகையைப்பறிக்க முயன்றவரை ஞாயிற்றுக்கிழமை மாநகரப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியைச் சோ்ந்தவா் மோகன் (29). இவா், தனது ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனைப் பற்றிய அடையாளம் தெரிந்த நிலையில் போலீஸாா் இறப்பு குறித்து விசாரித்து வருகின்றனா். ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக... மேலும் பார்க்க