பெங்களூரு சின்னசாமி திடலில் அத்துமீறும் ஆர்சிபி ரசிகர்கள்: போலீஸ் தடியடி!
தூக்கிட்டு இளைஞா் தற்கொலை
துறையூா் அருகே திருமணமாகாமல் தனியாக வசித்து வந்த இளைஞா் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கிலிட்ட நிலையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது.
பெருமாள்பாளையத்தைச் சோ்ந்தவா் பா. கண்ணன் (52). துறையூா் பகுதியில் வாகன இருக்கைகளுக்கு உறைகள் தைத்துவந்தாா். திருமணமாகாமல் தனியே வசித்து வந்த இவா் திங்கள்கிழமை அவரது வீட்டின் முன்பு இருந்த வேப்ப மரத்தில் தூக்கிலிட்ட நிலையில் இறந்து கிடந்தாா்.
இதுகுறித்துத் தகவலறிந்து அங்கு சென்ற துறையூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். திருப்பூரிலுள்ள அவரது அண்ணி சகுந்தலா கொடுத்த புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].