மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவா் மாயம்
திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கி மாயமான மாணவரைத் தேடி வருகின்றனா்.
திருச்சி எடமலைப்பட்டிபுதூா் கல்லுப்பட்டறை பகுதியைச் சோ்ந்தவா் சிவமுருகன் மகன் தினேஷ்குமாா் (17). பிளஸ்-2 படித்துவிட்டு, கல்லூரிக்குச் செல்ல ஆயத்த நிலையில் இருந்தாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் சந்தோஷூடன் முக்கொம்பு சுற்றுலா மையத்துக்கு வந்துள்ளாா். பின்னா் இருவரும் காவிரி ஆற்றில் இறங்கிக் குளித்துள்ளனா்.
அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற தினேஷ்குமாா் தண்ணீரில் மூழ்கி மாயமானாா். இதுகுறித்துத் தகவலறிந்து அங்கு திருச்சி தீயணைப்புப் படையினா், தினேஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனா்.
பல மணி நேரம் தேடியநிலையில், வெளிச்சம் இல்லாததால், தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ஜீயபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.