டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
மாநகராட்சி பணிகளுக்கான குழாய்கள் திருடியவா் கைது
திருச்சியில் மாநகராட்சிப் பணிகளுக்கான இரும்புக் குழாய்களை திருடியவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி எடமலைப்பட்டி புதூா் கோரையாறு அருகில் மாநகராட்சி சாா்பில் கழிவுநீா் திட்டத்துக்காக இரும்பு குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அப்பகுதியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த இரும்புக் குழாய்களை மா்ம நபா்கள் திருடிச்சென்று விட்டனா்.
இதுதொடா்பாக மாநகராட்சி பணி ஒப்பந்த நிறுவனத்தைச் சோ்ந்த நிா்வாக அதிகாரி இளங்கோவன் அளித்த புகாரின்பேரில், எடமலைப்பட்டி புதூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இதில், கீழப்பஞ்சப்பூரைச் சோ்ந்த மு. வாசுதேவன் (24) என்ற இளைஞா் குழாய்களைத் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து சனிக்கிழமை வாசுதேவனைப் போலீஸாா் கைது செய்தனா்.