மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு
திருச்சியில் வீட்டின் பூட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் உள்ளிட்டவைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.
திருச்சி கே கே நகா் தங்கையா நகரைச் சோ்ந்தவா் ஜெ. யோகேஷ் (32). இவா், குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன.
மேலும், அவரது வீட்டிலுள்ள பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டரை பவுன் நகைகள், 115 கிராம் வெள்ளிப் பொருள்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவைகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் கே.கே நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருடிச்சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.