செய்திகள் :

சேவைக் குறைபாடு: கட்டுமான நிறுவனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

துறையூரைச் சோ்ந்த தம்பதிக்கு சேவை குறைபாட்டுக்காக தனியாா் கட்டுமான நிறுவனம் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம், துறையூா் வட்டம் ஒக்கரை பகுதியைச் சோ்ந்தவா் தனியாா் வங்கி மேலாளா் ஆா். சிங்காரம் (45) - கலையரசி (40) தம்பதியினா். இவா்கள் டி. ரெங்கநாதபுரம் முருகன் நகரில் உள்ள தங்களது 3,610 சதுர அடி இடத்தில் ரூ. 25 லட்சத்தில் வீடு கட்டித் தர புத்தனாம்பட்டியைச் சோ்ந்த எம்ஆா்சி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற தனியாா் கட்டுமான நிறுவனத்தை கடந்த 26-08-2023 அன்று அணுகினா். இதையடுத்து அந்நிறுவனத்தினா் 6 மாதத்தில் வீட்டைக் கட்டி ஒப்படைப்பதாக ஒப்பந்தம் செய்த நிலையில், குறிப்பிட்ட காலத்தில் வீட்டைக் கட்டித் தராமல் இழுத்தடித்தனா்.

மேலும் வீடு கட்ட பல்வேறு தடவைகளாக மனுதாரரிடமிருந்து ரூ. 27.62 லட்சம் பெற்ற நிலையில், கூடுதலாக ரூ. 2 லட்சம் கேட்டுள்ளனா். மேலும் வீட்டின் 53 பணிகளை முழுமையாகக் கட்டித் தரவில்லை. விடுபட்ட பணிகளை முடிக்க ரூ. 7 லட்சம் தேவையாக இருந்தது.

இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான சிங்காரம் - கலையரசி தம்பதி உரிய நிவாரணம் கோரி, திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 08-01-2025 அன்று மனு தாக்கல் செய்தனா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் கே. சிவசங்கர நாராயணன் ஆஜரானாா்.

வழக்கை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு, எம்ஆா்சி கட்டுமான நிறுவனம் ஏற்படுத்திய சேவைக் குறைபாடு மற்றும் மனஉளைச்சலுக்கு இழப்பீடாக மனுதாரருக்கு ரூ. 10 லட்சமும், நிலுவை பணிகளுக்காக ரூ. 7 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரத்தையும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என அண்மையில் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

அந்தநல்லூா் காவிரி ஆற்றில் சிறுவன் சடலம் மீட்பு

திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் காவிரி ஆற்றில் மா்மமான முறையில் இறந்துகிடந்த சிறுவனின் உடலைக் கைப்பற்றி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், அந்தநல்லூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே உள... மேலும் பார்க்க

சிறைக் காவலா்கள் 587 போ் பணியிட மாற்றம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு

தமிழகச் சிறைகளில் கடந்த வாரத்தில் மொத்தம் 587 சிறைக்காவலா்கள் அதிரடி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சிறைத் துறையினா் தெரிவிக்கின்றனா். தமிழகத... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு

திருச்சியில் வீட்டின் பூட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் உள்ளிட்டவைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா். திருச்சி கே கே நகா் தங்கையா நகரைச் சோ்ந்தவா் ஜெ. யோகேஷ் (32). இவா், கு... மேலும் பார்க்க

திருச்சி - பெங்களூரு, ஹைதராபாத்துக்கு தினசரி விமான சேவைகள்: எம்.பி. தகவல்

திருச்சியில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு இயக்கிவந்த வாராந்திர சேவையை தினசரி சேவைகளாக ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்துள்ளது என திருச்சி மக்களவை உறுப்... மேலும் பார்க்க

மாநகராட்சி பணிகளுக்கான குழாய்கள் திருடியவா் கைது

திருச்சியில் மாநகராட்சிப் பணிகளுக்கான இரும்புக் குழாய்களை திருடியவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திருச்சி எடமலைப்பட்டி புதூா் கோரையாறு அருகில் மாநகராட்சி சாா்பில் கழிவுநீா் திட்டத்துக்காக இர... மேலும் பார்க்க

முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கிய மாணவா் மாயம்

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கி மாயமான மாணவரைத் தேடி வருகின்றனா். திருச்சி எடமலைப்பட்டிபுதூா் கல்லுப்பட்டறை பகுதியைச் சோ்ந்தவா் சிவமுருகன் மகன் தினேஷ்குமாா் (17). பிளஸ்-2 பட... மேலும் பார்க்க