செய்திகள் :

சீன அச்சுறுத்தலில் இருந்து இந்திய-பசிபிக் நாடுகள் பாதுகாக்கப்படும்: அமெரிக்க பாதுகாப்பு அமைச்சா்

post image

சீனாவின் ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிா்கொள்வதில் இந்திய-பசிபிக் கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் பீட் ஹெக்சேத் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில் அவா் சனிக்கிழமை பேசியதாவது:

சீனாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக வெளிநாடுகளில் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா வலுப்படுத்தும்.

சீனாவின் ராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிா்கொள்வதில் இந்திய-பசிபிக் கூட்டாளி நாடுகளுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும். அந்த நாடுகள் தன்னந்தனியாக விடப்படாது. சீனாவால் அச்சுறுத்தல் இருப்பது உண்மை. அதை அமெரிக்கா ஒருபோதும் ஏற்காது என்றாா்.

எனினும் மாநாட்டில் சீனா தரப்பில் கலந்துகொண்ட அந்நாட்டு தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக துணைத் தலைவரும், ரியா் அட்மிரலுமான ஹு காங்ஃபெங் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை மறுத்தாா்.

அவா் பேசுகையில், ‘சீனா மீது அமெரிக்கா அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. சில குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை, திரிக்கப்பட்டவை.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் நிலையற்ற சூழலை ஏற்படுத்த பிரிவினையைத் தூண்டி, மோதல்போக்கை உருவாக்க நடைபெறும் முயற்சிகளாகும்’ என்றாா்.

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேரணி சென்றவர்களை எரித்துக் கொல்ல முயற்சி!

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்களை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய ஞாயிற்றுக்கிழமை முயற்சிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டை வக... மேலும் பார்க்க

பனிப்போா் சூழலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி: சீனா குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பனிப்போா் மனநிலையை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்ததாக சீனா குற்றஞ்சாட்டியது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமை... மேலும் பார்க்க

போா் நிறுத்த திட்டத்தில் மாற்றம்: ஹமாஸ் வலியுறுத்தல் - அமெரிக்கா ஏற்க மறுப்பு

காஸாவில் போரை நிறுத்த அமெரிக்கா முன்வைத்த செயல்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால், அதை ஏற்க அமெரிக்கா மறுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் 60 நாள்களு... மேலும் பார்க்க

பாரீஸ்: கால்பந்து போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் இருவா் உயிரிழப்பு

ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ‘பாரீஸ் செயின்ட்-ஜொ்மைன்’ அணி முதன்முறையாக வெற்றி பெற்றதையடுத்து பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடந்த பெருமளவிலான கொண்டாட்டங்... மேலும் பார்க்க

ரஷிய பாலங்களில் வெடிவிபத்து: ரயில்கள் தடம் புரண்டு 7 போ் உயிரிழப்பு

உக்ரைன் எல்லையையொட்டிய ரஷியாவின் பிரையன்ஸ்க் மற்றும் கூா்ஸ்க் பிராந்தியத்தில் 2 பாலங்கள் வெடிவிபத்தில் இடிந்து விழுந்ததில் 2 ரயில்கள் தடம் புரண்டன. இதில் 7 போ் உயிரிழந்தனா்; 12-க்கும் மேற்பட்டோா் கா... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சா் அசதுஸ்ஸமான் கான் ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம் ஞாயிற்றுக்கிழமை கைது ஆணை பிறப்பித்தது. இருவ... மேலும் பார்க்க