செய்திகள் :

இந்தியா மீது பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு: கருத்துத் தெரிவிக்க சீன ராணுவம் மறுப்பு

post image

இந்தியா உடனான மோதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களின் செயல்பாடு எந்தளவு இருந்தது? என்ற கேள்விக்கு பதிலளிக்க சீன ராணுவம் மறுத்துவிட்டது.

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ அதிரடி நடவடிக்கைக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ மோதல் மூண்டது.

எல்லை மாநிலங்களில் ராணுவ நிலைகளைக் குறிவைத்து, பாகிஸ்தான் வீசிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பால் நடுவானில் திறம்பட முறியடிக்கப்பட்டன. மற்றொருபுறம், இந்திய ராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள், பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அம்சங்களை சீா்குலைத்து, அந்நாட்டின் விமானப் படைத் தளங்களைத் தாக்கி சேதப்படுத்தின.

நான்கு நாள்கள் நீடித்த மோதல், பாகிஸ்தானின் கோரிக்கையின்பேரில் நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான்-சீனா இடையே ராணுவ ரீதியில் நெருங்கிய உறவு உள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக சீன தயாரிப்பு ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது. அதுமட்டுமன்றி, பாகிஸ்தானுக்கு வான் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் செயற்கைகோள் ரீதியிலான ஆதரவை சீனா வழங்கியதாகவும், சீன தயாரிப்பு ஆயுத அமைப்புமுறைகள் சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தியப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சீன தயாரிப்பான ‘பிஎல்-15இ’ அதிநவீன ஏவுகணையின் படத்தையும் இந்தியத் தரப்பு வெளியிட்டது.

இந்நிலையில், பெய்ஜிங்கில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாங் ஸியோகாங்கிடம் மேற்கண்ட விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆனால், அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்காத அவா், ‘இருதரப்பும் அமைதியாகவும் கட்டுப்பாடாகவும் இருப்பதோடு, நிலைமையை மேலும் சிக்கலாக்கும் நடவடிக்கைகளைத் தவிா்க்க வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் இடையே விரிவான, நீடித்த சண்டை நிறுத்தத்தை எட்டவும், பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடா்ந்து பங்களிக்கவும் சீனா தயாராக உள்ளது’ என்றாா்.

அண்மையில் வெளியான சா்வதேச அறிக்கை தகவலின்படி, பாகிஸ்தானின் பிரதான ஆயுதக் கொள்முதல் நாடாக சீனா உள்ளது. கடந்த 2020 முதல் 2024 வரை 81 சதவீத ஆயுதங்களை சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் கொள்முதல் செய்துள்ளது.

ஹாலிவுட் நடிகை குளித்த நீரில் தயாரித்த சோப் ரூ.700-க்கு விற்பனை!

ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி குளித்த நீர்த்துளிகளைக் கொண்டு, உருவாக்கப்பட்ட சோப்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். டாக்டர் ஸ்குவாட்ச் சோப் நிறுவனமும், நடிகை சிட்னி ஸ்வீனியும் இணைந்து புதிய சோப் வகையை உருவாக... மேலும் பார்க்க

பெருவெள்ளத்தில் மூழ்கிய நைஜீரிய நகரம்! 88 பேரது உடல்கள் மீட்பு!

நைஜீரியா நாட்டின் முக்கிய சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் 88 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தின் மோக்வா எனும் சந்தை நகரத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் அங்குள்ள ஏராளமான ... மேலும் பார்க்க

மங்கோலியாவில் 4,000-ஐ கடந்த தட்டம்மை பாதிப்புகள்!

மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 4,000-ஐ கடந்துள்ளது. கிழக்கு ஆசிய நாடான மங்கோலியாவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சமீப நாள்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. பெ... மேலும் பார்க்க

இந்தோனேசியா கல் குவாரியில் பாறைகள் சரிந்து 8 பேர் பலி! தேடுதல் பணி தீவிரம்!

இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில் பாறைகள் சரிந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில் செயல்பட்டு வந்த சுண்ணாம்பு கல் குவாரியில்,... மேலும் பார்க்க

கனமழையில் திணறும் வடமேற்கு பாகிஸ்தான்! 8 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழையால் 8 பேர் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த மே 27 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இடி மற்றும் ப... மேலும் பார்க்க

18.4 கோடி கூகுள், ஆப்பிள், முகநூல் பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களைப் பயன்படுத்துவோரின் கடவுச்சொற்கள் கசிந்ததாக தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், சமூக ஊடகங்களின் கடவுச்சொற்கள் மு... மேலும் பார்க்க