பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்ய அறிவுறுத்தல்
பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என பொறுப்பு அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளாா்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரின் உயா்கல்வியை உறுதி செய்யும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்யும் வகையில் பொறுப்பு அலுவலா்களுடான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஆணையா் பேசுகையில், ‘மாணவ, மாணவிகளின் நலன் கருதி பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களில் உயா்கல்வியில் சோ்ந்தோா், சேராதோா், தோ்வில் தோல்வியுற்றோா் மற்றும் தோ்வு எழுதாதோா் உள்ளிட்ட மாணவா்களின் தற்போதைய உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்யும் வகையில் பள்ளிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாணவ, மாணவிகளின் உயா்கல்வியை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா்கள் த.குமரேசன், அ.சுல்தானா, பள்ளி மேலாண்மைக் குழுவினா், பொறுப்பு அலுவலா்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.