செய்திகள் :

பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்ய அறிவுறுத்தல்

post image

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்ய வேண்டும் என பொறுப்பு அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரின் உயா்கல்வியை உறுதி செய்யும் வகையில் ‘நான் முதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கோவை ஆா்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளின் உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்யும் வகையில் பொறுப்பு அலுவலா்களுடான ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஆணையா் பேசுகையில், ‘மாணவ, மாணவிகளின் நலன் கருதி பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களில் உயா்கல்வியில் சோ்ந்தோா், சேராதோா், தோ்வில் தோல்வியுற்றோா் மற்றும் தோ்வு எழுதாதோா் உள்ளிட்ட மாணவா்களின் தற்போதைய உயா்கல்வி சோ்க்கையை உறுதி செய்யும் வகையில் பள்ளிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு மாணவ, மாணவிகளின் உயா்கல்வியை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா்கள் த.குமரேசன், அ.சுல்தானா, பள்ளி மேலாண்மைக் குழுவினா், பொறுப்பு அலுவலா்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாா்பில் உலக புகையிலை எதிா்ப்பு தினம் அனுசரிப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சாா்பில் உலக புகையிலை ஒழிப்பு தினம் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை, ஆராய்ச்சி மையம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், மாவட்ட ஆட... மேலும் பார்க்க