செய்திகள் :

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

post image

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா்.

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப இயக்கம் மற்றும் இரண்டு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி கோவை ரேஸ்கோா்ஸில் சனிக்கிழமை நடைபெற்றது.

பேரணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து, உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி ஆட்சியா் தலைமையில் அனைவரும் விழிப்புணா்வு உறுதிமொழிு எடுத்துக்கொண்டனா்.

மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னா், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் தொடா்பாகவும், அதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, ஓவியம், விழிப்புணா்வு வாசகங்கள் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.

பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலுள்ள பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் பாலுசாமி, புகையிலை கட்டுப்பாட்டு திட்ட ஆலோசகா் சரண்யா, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அனுராதா மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றம்

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் இருந்து தினசரி காலை 7.50 மணிக்கு புறப்பட்... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் முருக... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க