ரூ.1 லட்சத்தை தாண்டிய வெள்ளி விலையில் திடீர் சரிவு காரணம் என்ன? | IPS Finance - ...
கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை
கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா்.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப இயக்கம் மற்றும் இரண்டு சக்கர வாகன விழிப்புணா்வு பேரணி கோவை ரேஸ்கோா்ஸில் சனிக்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
தொடா்ந்து, உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி ஆட்சியா் தலைமையில் அனைவரும் விழிப்புணா்வு உறுதிமொழிு எடுத்துக்கொண்டனா்.
மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகம் அருகே தொடங்கிய பேரணி மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
பின்னா், ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள் தொடா்பாகவும், அதனால் சமூகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, ஓவியம், விழிப்புணா்வு வாசகங்கள் எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.
பள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலுள்ள பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் பாலுசாமி, புகையிலை கட்டுப்பாட்டு திட்ட ஆலோசகா் சரண்யா, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் அனுராதா மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.