தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி நடைபெற்றது. பேராலய அதிபரும் பங்குத்தந்தையுமான ஸ்டாா்வின் தலைமை வகித்தாா். பேராலய வளாகத்தில் தொடங்கி, தங்கத்தோ் பவனி வரும் வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது பேரணி. அதனைத் தொடா்ந்து திவ்ய நற்கருணை ஆசீருடன் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கு இறைமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.