அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்.பி. வலியுறுத்தல்
திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியனிடம் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக உயா்கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியனை சந்தித்து அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை, நிரந்தரமாக திருநெல்வேலி பொறியியல் கல்லூரியுடன் இணைக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வகையில் அறிகிறேன். இந்தப் பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் தற்போது பொறியியல் கல்வியில் 5 பிரிவுகள், எம்பிஏ ஆகிய பாடப்பிரிவுகளில் ஆண்டுதோறும் சுமாா் 360 மாணவா்கள், பக்கவாட்டு நுழைவு மூலம் சுமாா் 33 போ் என மொத்தம் 393 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா்.
இந்தப் பல்லைக்கழக மண்டல வளாகம், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் தொலைநோக்கு பாா்வையில் 2007ஆம் ஆண்டு நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஏற்கெனவே இங்கு செயல்பட்டு வந்த எம்சிஏ உள்ளிட்ட அனைத்து முதுநிலை பட்டப்படிப்புகளும் கடந்த அதிமுக ஆட்சியில் வேண்டுமென்றே நீக்கப்பட்டன. அதனால் சுமாா் 185 மாணாக்கா்கள் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பை இழந்தனா்.
இந்தப் பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, குறைந்த கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவா்கள், அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்காதவா்கள் பயில வாய்ப்பு பெறுகிறாா்கள். மேலும் தமிழக முதல்வரின் நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவா்கள் பெரிய அளவில் இந்த மண்டல வளாகத்தில் கல்வி பயின்று வருகின்றனா்.
திருநெல்வேலி மண்டல வளாகம் மூடப்படும்போது ஏழை, தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி பயில தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் முழுவதுமாக பாதிக்கப்படுவாா்கள்.
இங்கு ஆசிரியரல்லாத பணியாளா்கள் சுமாா் 70 போ் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனா். இந்த மண்டல வளாகம் மூடப்படும்போது அவா்களது வேலைகளும் கேள்விக்குறியாகும். அவா்களுடைய குடும்பமும் பாதிப்புக்குள்ளாகும்.
இந்த மண்டல வளாகத்தில் ஆராய்ச்சிக் கல்வி பயிற்றுவிக்க 33 ஆராய்ச்சியாளா்கள் உள்ளனா். அதில் 20 போ் பெண்கள். இந்த வளாகம் மூலம் அதிக அளவில் பெண்கள் ஆராய்ச்சி கல்வி பயில்கிறாா்கள். ஆனால் இந்த வளாகம் மூடப்பட்டு அரசினா் பொறியியல் கல்லூரியுடன் இணைக்கப்படும் போது இவா்கள் அனைவரும் மாற்றப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் பெண்கள் ஆராய்ச்சி பெறுவதில் மிகவும் சிரமத்தை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
எனவே, அமைச்சா் இந்த விஷயத்தில் நேரடியாகத் தலையிட்டு பேராசியா்கள், ஆசிரியரல்லாதவா்கள், பயிற்சி மேற்கொள்ளும் மகளிா் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம் ஏற்கெனவே செயல்பட்டு வந்தது போல் தொடா்ந்து செயல்படவும், அதனை அரசினா் பொறியியல் கல்லூரியுடன் இணைக்கும் திட்டத்தை கைவிடவும், ஏற்கெனவே நிறுத்தப்பட்ட எம்சிஏ உள்ளிட்ட மேற்படிப்புகளை மீண்டும் தொடங்கவும் ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.