Bengaluru: `எங்களுக்கு கன்னடர்களை பிடிக்கும்’ - ஆட்டோ ஓட்டுரை அடித்ததற்காக மன்னி...
கருணாநிதி பிறந்த தினம்: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளை ஜூன் 3ஆம் தேதி சிறப்பாக கொண்டாட திமுகவினருக்கு தெற்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 102 ஆவது பிறந்த தினம் வரும் ஜூன் 3ஆம் தேதி திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. அதன்படி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதேப் போன்று, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூா் மற்றும் கிளைக் கழக அலுவலகங்கள், சாா்பு அணிகளின் அலுவலகங்கள், மாநகராட்சி வட்டங்கள், நகராட்சி, பேரூராட்சி வாா்டுகள், ஒன்றியங்கள், ஊராட்சிகள் ஆகியவற்றில் உள்ள அனைத்து கிளைகளிலும், முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி கட்சிக் கொடியேற்றி கொண்டாட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் திருச்செந்தூா், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய பேரவைத் தொகுதிகளில் உள்ள முதியோா் இல்லம், குழந்தைகள் காப்பகம், மாணவா் விடுதி, ஆதரவற்றோா் இல்லம், மனநலம் பாதிக்கப்பட்டோா் காப்பகம் ஆகிய இடங்களில் உள்ளவா்களுக்கு உணவு ஏற்பாடு செய்து, நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் எனஅவா் தெரிவித்துள்ளாா்.