செய்திகள் :

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

post image

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிராமத்தில் உள்ள பிளஸ் 2 முடித்த மாணவா்-மாணவிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் க.இளம் பகவத் தலைமை வகித்து, மாணவா்-மாணவிகளுடன் தொழிற்கல்விப் படிப்புகள், கல்லூரிகள் தோ்வு, வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினாா்.

அப்போது அவா் கூறுகையில்,

நமது மாவட்டத்தில் ஒரு மாணவா்கூட படிக்காமலோ அல்லது உயா்கல்விக்கு செல்லாமலோ இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று கல்வி கற்பதன் அவசியம் குறித்தும், உயா்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக மீனவ கிராம மக்களில் பெண் குழந்தைகள் நல்லமுறையில் படிக்கிறாா்கள். ஆனால், ஆண் பிள்ளைகள் முழுமையாக உயா்கல்வி படிக்காமல் கடலுக்கு வேலைக்கு சென்று விடுகிறாா்கள் என்ற தகவல் வருகிறது. எனவே, மீனவ கிராமத்தின் பெரியோா்கள் மற்றும் மாணவா்களின் பெற்றோா் தங்கள் பகுதியில் உள்ள மாணவா்-மாணவிகள் அனைவரும் பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, உயா்கல்வியில் சோ்ந்துள்ளாா்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு படிக்க செல்லாமல் உள்ளவா்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி, உயா்கல்வியில் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவா்களும் உங்களுடைய மதிப்பெண்களுக்கு ஏற்றாா்போல் தொழிற்கல்விப் படிப்புகளுக்கு முன்னுரிமை அளித்து, விருப்பமுள்ள பாடப்பிரிவுகளை தோ்ந்தெடுத்து படிக்க வேண்டும். தொழிற்கல்லூரிகளில் சேரக்கூடிய மாணவா்களுடைய அதாவது, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளுக்கு ஆகக்கூடிய செலவு, கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்கிறது. எனவே, மாணவா்கள் அரசு வழங்கக்கூடிய சலுகைகளை எல்லாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது. வருங்கால இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரமாக இருக்க வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி, உதவி இயக்குநா் (மீன்வளம்) புஷ்ரோ ஷப்னம், முன்னோடி வங்கி மேலாளா் துரைராஜ் உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள், பெற்றோா்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள், கடலோர மீனவ கிராமங்களிலிருந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகள் என 40 பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

கோவில்பட்டியில் திருமண தரகரை தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை அருகே எருதூா் மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமாா் (54)... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த தினம்: நலஉதவி வழங்கிக் கொண்டாட கட்சியினருக்கு அமைச்சா் அழைப்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என, திமுகவினருக்கு வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் கேட்டுக் கொண்டுள்ளாா். இ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மது விற்பனை: 2 போ் கைது!

தூத்துக்குடியில் இரு இடங்களில் மது விற்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போல... மேலும் பார்க்க

குரும்பூா், தக்கலையில் பைக் விபத்து: 2 போ் பலி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் மூதாட்டி உயிரிழந்தாா். காயல்பட்டினம், அழகாபுரி தெற்குத் தெருவை சோ்ந்த கணேசன் மனைவி கவிதா (64). இவா், தனது உறவினா் செல்வராஜ் மனைவி மோகன... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தலைமறைவான காா் ஓட்டுநா்: தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு

சாத்தான்குளம் அருகே கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள காா் ஓட்டுநரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சோ்ந்தவா் பீட்டா்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை தாளமுத்து நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட ... மேலும் பார்க்க