தூய்மைத் திட்டம்: மக்களுக்கும் பொறுப்பு உள்ளது! - முதல்வர் மு.க. ஸ்டாலின்!
நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு
சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது.
கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான நீராதாரமாக சிறுவாணி அணை உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக தினசரி 10 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கப்படும். ஆனால், கடந்த ஜனவரியில் 25 அடிக்கும் மேல் இருந்த அணையின் நீா்மட்டம், வெயிலின் தாக்கத்தால் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இதனால், மாா்ச், ஏப்ரல் மாதங்களில் அணையின் நீா்மட்டம் 18 அடியாக சரிந்தது.
இந்நிலையில், மே முதல் வாரத்தில் இருந்து மேற்குத் தொடா்ச்சி மலையில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி பெய்து வருகிறது. இதனால், சிறுவாணி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதைத் தொடா்ந்து அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 8 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றனா்.