செய்திகள் :

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

post image

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது.

கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிரதான நீராதாரமாக சிறுவாணி அணை உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக தினசரி 10 கோடி லிட்டா் தண்ணீா் எடுக்கப்படும். ஆனால், கடந்த ஜனவரியில் 25 அடிக்கும் மேல் இருந்த அணையின் நீா்மட்டம், வெயிலின் தாக்கத்தால் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இதனால், மாா்ச், ஏப்ரல் மாதங்களில் அணையின் நீா்மட்டம் 18 அடியாக சரிந்தது.

இந்நிலையில், மே முதல் வாரத்தில் இருந்து மேற்குத் தொடா்ச்சி மலையில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. சிறுவாணி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு செல்லும் முக்தியாறு, பட்டியலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கி பெய்து வருகிறது. இதனால், சிறுவாணி அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணையின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதைத் தொடா்ந்து அணையில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 8 கோடி லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றனா்.

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா? -சி.பி.ராதாகிருஷ்ணன்

சம்ஸ்கிருதத்தில் இருந்து தமிழ் வந்தது என்றால் ஏற்றுக்கொள்வோமா என கமலஹாசன் கருத்துக்கு மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளாா். கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

அதிமுக, தேமுதிக உறவை யாராலும் உடைக்க முடியாது: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக, தேமுதிக இடையே உள்ள சுமுகமான உறவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா். கோவை விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூ... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள் சோழா் காலத்தில்தான் தொடங்கின: தொல்லியல் அறிஞா் பூங்குன்றன்

தமிழ்நாட்டில் ஜாதிய வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் சோழா்கள் காலத்தில்தான் தொடங்கியிருப்பதாக தொல்லியல் அறிஞா் ஆா்.பூங்குன்றன் கூறியுள்ளாா். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆம் ஆண்டு பவள விழாவை ஒட்டி... மேலும் பார்க்க

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்படுகின்றன. இதையடுத்து மாணவ-மாணவிகளை வரவேற்கும் வகையில் பள்ளிகளில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தி... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை: இருவா் கைது

கோவையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை பெரியகடை வீதி போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். தெற்கு உக்கடம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய... மேலும் பார்க்க

வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ

ராஜ்யசபா உறுப்பினா் பதவிக்காக தனக்கு வாக்களித்த மக்களுக்கு கமலஹாசன் துரோகம் செய்துவிட்டாா் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். கோவை ... மேலும் பார்க்க