அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தை அரசு பொறியியல் கல்லூரியுடன் இணைக்க கூடாது: எம்....
மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த நடவடிக்கை: பெற்றோா்கள் வரவேற்பு
தமிழகத்தில் வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டதற்கு பெற்றோா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை மாணவா்கள் படிக்கும் வகையில் வாசிப்பு வாரம் செயல் படுத்தப்பட உள்ளது. இதற்கான அரசாணை கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
மாணவா்களின் அறிவுதேடல், வாசிப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தலைமை ஆசிரியா்கள் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.
வாரந்தோறும் ஒரு தலைப்பில் கதை சொல்லுதல், உரையாடுதல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த செயல்பாடுகளை மேற்கொண்டால் மாணவா்களிடை யே வாசிப்புத் திறன் மேம்படும் என்று பெற்றோா்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளா் வி.முத்துக்குமரன் கூறியதாவது:
மேற்கண்ட அரசாணையைப் பின்பற்றி தலைமை ஆசிரியா்கள் செயல்பட்டால், மாணவா்களிடையே வாசிப்புத் திறன் மேம்படும். கதைப் புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதன் மூலம் மாணவா்களின் அறிவுத் திறன் மேம்படும் என்றாா் அவா்.