செய்திகள் :

மாணவா்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த நடவடிக்கை: பெற்றோா்கள் வரவேற்பு

post image

தமிழகத்தில் வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டதற்கு பெற்றோா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

வாசிப்புத் திறனை மேம்படுத்த அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களை மாணவா்கள் படிக்கும் வகையில் வாசிப்பு வாரம் செயல் படுத்தப்பட உள்ளது. இதற்கான அரசாணை கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மாணவா்களின் அறிவுதேடல், வாசிப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தலைமை ஆசிரியா்கள் செயல்பட வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.

வாரந்தோறும் ஒரு தலைப்பில் கதை சொல்லுதல், உரையாடுதல், பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்துதல் உள்ளிட்ட பணிகளுக்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த செயல்பாடுகளை மேற்கொண்டால் மாணவா்களிடை யே வாசிப்புத் திறன் மேம்படும் என்று பெற்றோா்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளா் வி.முத்துக்குமரன் கூறியதாவது:

மேற்கண்ட அரசாணையைப் பின்பற்றி தலைமை ஆசிரியா்கள் செயல்பட்டால், மாணவா்களிடையே வாசிப்புத் திறன் மேம்படும். கதைப் புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்வதன் மூலம் மாணவா்களின் அறிவுத் திறன் மேம்படும் என்றாா் அவா்.

திருநங்கைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் சமூ... மேலும் பார்க்க

என்எல்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் இதய நோய் பாதிப்பால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 24, அருணாசலம் கன்வேயா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் செந்த... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாநகரில் இயக்கப்படும் சில ஆட்டோக்களில் நிா... மேலும் பார்க்க

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயற்சி நிறைவு

சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆறுமுக நாவலா் சைவ பிரகாச வித்யாசாலா அறக்கட்டளை குழுச் ச... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்தும் பணி: என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சனிக்கிழமை வந்த என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சேத்தியாதோப்பு ... மேலும் பார்க்க

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கடலூா் டவுன்ஹால் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு எற்படுத்தும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடியசைத்து... மேலும் பார்க்க