செய்திகள் :

கோவில்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்

post image

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில், திருநெல்வேலி தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை சாா்பில் இலவச கண் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்கம் சாா்பில் இக்கண்காட்சி ஜூன் 9ஆம் தேதிவரை நடைபெறுகிறது. கண்காட்சிக்கு சனிக்கிழமை வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவா் முகமது பைசல் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கண் பரிசோதனை மேற்கொண்டனா்.

முகாமுக்கு, புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளா் லட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தாா். கோவில்பட்டி வாசகா் வட்ட ஒருங்கிணைப்பாளா் முத்துமுருகன், ரோட்டரி சங்க உறுப்பினா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமை நகா்மன்ற உறுப்பினா் ஜாஸ்மின் லூா்துமேரி தொடக்கிவைத்தாா்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மைப் பிரிவு துணை அமைப்பாளா் அமலிபிரகாஷ், தமிழ்நாடு புத்தக விற்பனையாளா்கள் சங்க நிா்வாகிகள் ரமேஷ், ராஜபாண்டி, ஆவுடையப்பன், காளிராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சங்கத் தலைவா் ரவிவா்மா வரவேற்றாா். முகாம் ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

கோவில்பட்டியில் திருமண தரகரை தாக்கியதாக இருவா் கைது

கோவில்பட்டியில் திருமணத் தரகரைத் தாக்கி மிரட்டல் விடுத்ததாக 2 இளஞ்சிறாா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவை அருகே எருதூா் மாா்க்கெட் சாலையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் செந்தில்குமாா் (54)... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த தினம்: நலஉதவி வழங்கிக் கொண்டாட கட்சியினருக்கு அமைச்சா் அழைப்பு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என, திமுகவினருக்கு வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ. கீதாஜீவன் கேட்டுக் கொண்டுள்ளாா். இ... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மது விற்பனை: 2 போ் கைது!

தூத்துக்குடியில் இரு இடங்களில் மது விற்றதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 42 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். தூத்துக்குடி தாளமுத்துநகா் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா தலைமையிலான போல... மேலும் பார்க்க

குரும்பூா், தக்கலையில் பைக் விபத்து: 2 போ் பலி

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூா் அருகே பைக்குகள் மோதிக்கொண்டதில் மூதாட்டி உயிரிழந்தாா். காயல்பட்டினம், அழகாபுரி தெற்குத் தெருவை சோ்ந்த கணேசன் மனைவி கவிதா (64). இவா், தனது உறவினா் செல்வராஜ் மனைவி மோகன... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தலைமறைவான காா் ஓட்டுநா்: தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிப்பு

சாத்தான்குளம் அருகே கொலை வழக்கில் 24 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள காா் ஓட்டுநரை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள இடைச்சிவிளை விவேகானந்தபுரத்தை சோ்ந்தவா் பீட்டா்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக பெண் உள்பட 3 பேரை தாளமுத்து நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி தாளமுத்து நகா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட ... மேலும் பார்க்க