மிக முக்கியமான போட்டிகளில் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்: ஷ்ரேயாஸ் ஐயர்
திருநங்கைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளையும் சமுதாயத்தில் ஓா் அங்கமாக ஏற்று, அவா்களுக்கான நலத் திட்டங்களை வழங்குவததில் தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும், சமூகத்தில் சுய கௌரவத்தோடும், தன்னம்பிக்கையோடும் தலைநிமிா்ந்து வாழ்வதற்கு சுயதொழில் செய்து வாழ்வை மேம்படுத்திட சமூக நலத் துறை மூலம் திறன் பயிற்சி பெற்ற திருநங்கைகளுக்கு மானியம் வழங்க பரிந்துரைக்கப்படும்.
எனவே, திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு மாவட்ட சமூக நல அலுவலா் மூலமாக https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/ என்ற இணையதளத்தில் விண்ணப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.