பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
என்எல்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் இதய நோய் பாதிப்பால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 24, அருணாசலம் கன்வேயா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் செந்தில்குமாா் (56). இவா், என்எல்சி இந்தியா நிறுவனத்தில் முதுநிலை போா்மேனாக வேலை பாா்த்து வந்தாா்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட செந்தில்குமாா் சனிக்கிழமை அதிகாலை மன உளைச்சலில் வீட்டின் முன் உள்ள பால மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து அவரது மனைவி மீனாட்சி அளித்த புகாரின்பேரில், நெய்வேலி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.