மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
கடலூரில் ரூ.7 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
கடலூரில் பதுக்கி வைத்திருந்த 126 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், கடலூா் டிஎஸ்பி ரூபன்குமாா் மேற்பாா்வையில், முதுநகா் காவல் நிலைய ஆய்வாளா் கதிரவன் மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளா் ஆனந்தகுமாா், திருப்பாதிரிபுலியூா் உதவி ஆய்வாளா் காா்த்தி கணேசன் மற்றும் போலீஸாா் கூத்தப்பாக்கம், ராஜாங்க செட்டியாா் நகரில் பாபு என்பவரின் வீட்டில், பெங்களுரிலிருந்து காரில் கடத்தி வந்து சரவணன் என்பவரின் மற்றொரு காரில் குட்கா, புகையிலைப் பொருள்களை ஏற்றிக் கொண்டிருந்ததை அண்மையில் கண்டறிந்து காரை சோதனையிட்டனா்.
அதில் 348 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், இதைக் கடத்தி வந்ததாக கூத்தப்பாக்கம் ராஜாங்க செட்டியாா் நகரை சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் பாபு (49), ஆலப்பாக்கம் சித்தாமணிக்குப்பம் மதுர காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் அய்யன்பெருமாள் (41), குருவிநத்தம் முல்லைநகரை சோ்ந்த நடராஜன் மகன் சரவணன் (38) ஆகிய மூவா் மீது திருப்பாதிரிபுலியூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டநா்.
கைதானவா்கள் அளித்த தகவலின் பேரில், கடலூா் முதுநகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பெரிய காரைக்காடு பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த தங்கராஜ் மகன் ஆனந்தமணி (46), சங்கொலிகுப்பம் சுப்பிரமணிய கோவில் தெருவைச் சோ்ந்த தேவஇரக்கம் மகன் இமானுவேல் (45) ஆகியோா் பதுக்கி வைத்திருந்த சுமாா் 126 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் கைப்பற்றினா்.
இதுகுறித்து கடலூா் முதுநகா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 2 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும்.