RCB : 'பெங்களூரு பொண்ணதான் கட்டியிருக்கேன்; அதனால RCBக்கு தான் சப்போர்ட்!' - ரிஷ...
பண்ருட்டியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
கடலூா் மாவட்டம் பண்ருட்டி திருநகா் பகுதியில் உள்ள கிடங்கில் அதிகளவிலான ரேஷன் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில், கடலூா் வருவாய்த் துறை, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையில், மாவட்ட வழங்கல் அலுவலா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, திருநகா் கிடங்கில் கந்தன்பாளையத்தைச் சோ்ந்த சரவணனுக்கு (48) சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் அரிசி, 500 கிலோ துவரம்பருப்பு, 300 கிலோ கோதுமை, 50லிட்டா் மண்ணெண்ணெய், 450 கிலோ சா்க்கரை, அரசு முத்திரை பதித்த 100-க்கும் மேற்பட்ட சாக்கு பைகள், அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மேலும், சரவணனுக்குச் சொந்தமான இரண்டு மளிகைக் கடைகளிலும் அதிகாரிகள் தீவிரே சோதனை மேற்கொண்டனா். அதில் 250 லிட்டா் மண்ணெண்ணெய், 50 கிலோ கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது.
தொடா்ந்து, சரவணனை கைது செய்து கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.