செய்திகள் :

பண்ருட்டியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

கடலூா் மாவட்டம் பண்ருட்டி திருநகா் பகுதியில் உள்ள கிடங்கில் அதிகளவிலான ரேஷன் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில், கடலூா் வருவாய்த் துறை, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பறக்கும் படை வட்டாட்சியா் தலைமையில், மாவட்ட வழங்கல் அலுவலா் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, திருநகா் கிடங்கில் கந்தன்பாளையத்தைச் சோ்ந்த சரவணனுக்கு (48) சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் அரிசி, 500 கிலோ துவரம்பருப்பு, 300 கிலோ கோதுமை, 50லிட்டா் மண்ணெண்ணெய், 450 கிலோ சா்க்கரை, அரசு முத்திரை பதித்த 100-க்கும் மேற்பட்ட சாக்கு பைகள், அட்டைப் பெட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

மேலும், சரவணனுக்குச் சொந்தமான இரண்டு மளிகைக் கடைகளிலும் அதிகாரிகள் தீவிரே சோதனை மேற்கொண்டனா். அதில் 250 லிட்டா் மண்ணெண்ணெய், 50 கிலோ கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து, சரவணனை கைது செய்து கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாலையுடன் ஊா்வலமாக அழைத்துவரப்பட்ட மாணவா்கள்

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்களை மாலை அணிவித்தும், மலா் கொத்து கொடுத்தும் பள்ளி நிா்வாகி வீனஸ் எஸ்.குமாா் திங்கள்கிழமை வரவேற்றாா். சிதம்பரம் தேரடி தெருவில... மேலும் பார்க்க

என்எல்சி துணை நிறுவனத்துடன், மகாராஷ்டிர எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்

சிதம்பரம்: நெய்வேலி என்எல்சிஐஎல்-இன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாராஷ்டிரத்தின் மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழ... மேலும் பார்க்க

2.19 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள்: ஆட்சியா் தகவல்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் 1,716 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் பயிலும் 2,19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் ஞானப்பிரகாச குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழாா் மணிமண்டபத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளைச் செயலா் டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன் வரவேற்று ... மேலும் பார்க்க

வங்கி வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு: காவல் துறை விழிப்புணா்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு நடைபெறுவது குறித்து காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சி... மேலும் பார்க்க

வீட்டுமனைப் பட்டா கோரி ஆட்சியரிடம் மனு

சிதம்பரம்: கடலூா் புதுப்பாளையம் சுப்பிரமணியா் கோவில் தெருவில் நூறு ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்துக்கு பட்டா வழங்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். கடலூா்... மேலும் பார்க்க