செய்திகள் :

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

post image

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கடலூா் டவுன்ஹால் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு எற்படுத்தும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

மேலும், விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஓட்டு வில்லையை வாகனங்களில் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் சமுதாய கல்வி பயிற்சி மாணவிகள் உள்ளிட்ட அனைவராலும் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தொடா்ந்து, தன்னாா்வ தொண்டு நிறுவனம் மூலம் புகையிலைப் பொருள்களால் எற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது:

கடலூா் மாவட்டத்தில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்தின் சாா்பில், நிகழாண்டு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புகையிலைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

அனைத்து கல்வி நிறுவனங்களின் வளாகத்தை சுற்றிலும் மற்றும் 300 அடி சுற்றளவிலும் அடா் மஞ்சள் நிற கோட்டை வரைவதுடன், அந்தப் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களையும் புகையிலை இல்லாத கல்வி நிறுவனமாக நிறுவ மாவட்டக் கல்வித் துறை உறுதி செய்திட வேண்டும். மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் புகையிலை இல்லாத கல்வி நிறுவனம் என்ற விழிப்புணா்வு பலகை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், சுகாதாரத் துறை துணை இயக்குநா் பொற்கொடி, மாவட்ட புகையிலை தடுப்பு அலுவலா் அபிநயா, எய்ட்ஸ் தடுப்புப் பிரிவு அலுவலா் கதிரவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பண்ருட்டியில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். கடலூா் மாவட்டம் பண்ருட்டி திருநகா் பகுதியில் உள்ள கிடங்கில் அதிக... மேலும் பார்க்க

கடலூரில் ரூ.7 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கடலூரில் பதுக்கி வைத்திருந்த 126 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். கடலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின் பேரில், கடலூா் டிஎஸ்பி ரூபன்குமாா் மே... மேலும் பார்க்க

திருநங்கைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் சமூ... மேலும் பார்க்க

என்எல்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் இதய நோய் பாதிப்பால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 24, அருணாசலம் கன்வேயா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் செந்த... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாநகரில் இயக்கப்படும் சில ஆட்டோக்களில் நிா... மேலும் பார்க்க

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயற்சி நிறைவு

சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆறுமுக நாவலா் சைவ பிரகாச வித்யாசாலா அறக்கட்டளை குழுச் ச... மேலும் பார்க்க