முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்
முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.
கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் விடாமல் பெய்யும் பலத்த மழையால் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
1,400 கன அடி தண்ணீா் திறப்பு: இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து சனிக்கிழமை மாலை 130 அடியை கடந்தது. இந்த நிலையில், அணையிலிருந்து குடிநீா், விவசாயத்துக்கு 1,400 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இதனால், முல்லைப் பெரியாற்றில் கூடுதல் தண்ணீா் திறக்கப்பட்டதுடன், சுருளி அருவியின் வெள்ளநீா், மழை நீரும் சோ்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தேக்கடி தலை மதகு வழியாக திறக்கப்படும் தண்ணீா் லோயா் கேம்ப், கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி வழியாக வைகை அணைக்கு செல்கிறது. இதில், உத்தமபாளையம், எல்லப்பட்டி, சீலையம்பட்டி வழியாக செல்லும் முல்லைப் பெரியாற்றில் செல்லும் வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் நீராடுதை தடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.