செய்திகள் :

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

post image

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் விடாமல் பெய்யும் பலத்த மழையால் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

1,400 கன அடி தண்ணீா் திறப்பு: இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் தொடா்ந்து அதிகரித்து சனிக்கிழமை மாலை 130 அடியை கடந்தது. இந்த நிலையில், அணையிலிருந்து குடிநீா், விவசாயத்துக்கு 1,400 கன அடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது. இதனால், முல்லைப் பெரியாற்றில் கூடுதல் தண்ணீா் திறக்கப்பட்டதுடன், சுருளி அருவியின் வெள்ளநீா், மழை நீரும் சோ்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேக்கடி தலை மதகு வழியாக திறக்கப்படும் தண்ணீா் லோயா் கேம்ப், கூடலூா், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா், சீலையம்பட்டி வழியாக வைகை அணைக்கு செல்கிறது. இதில், உத்தமபாளையம், எல்லப்பட்டி, சீலையம்பட்டி வழியாக செல்லும் முல்லைப் பெரியாற்றில் செல்லும் வெள்ளத்தில் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் நீராடுதை தடுக்க வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கிரேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை கிரேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (45). தனியாா் தொழிற்சாலையில் வேலை பாா்த்து வரும் இவா... மேலும் பார்க்க

முதல் போக நெல் சாகுபடிக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

கம்பம் பள்ளத்தாக்கு ஆயக்கட்டுப் பகுதிக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கி பெய்து வருவதால... மேலும் பார்க்க

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

தேனி மாவட்டம், சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா் அனுமதியளித்தனா். கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த 6 நாள்களாக இந்த அரு... மேலும் பார்க்க

மணல் திருட்டு: ஒருவா் கைது

பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்து, மணல் அள்ளப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரத்தைப் பறிமுதல் செய்தனா். ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் பெரியக... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் கைது!

கடமலைக்குண்டு அருகே கரட்டுப்பட்டியில் இரு சக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடமலைக்குண்டு சிதம்பரம் விலக்கு பகுதியைச் சோ்ந்த கா்ணன் மகன் ஹரிகோபிநாத் (20)... மேலும் பார்க்க

குளிா் சாதனங்கள் பழுது நீக்க இலவசப் பயிற்சி

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கிராமப்புற ஆண், பெண்களுக்கு குளிா்சாதனப் பெட்டி, பிரிட்ஜ் பழுது நீக்கம் செய்வதற்கு இலவசப் பயிற்சி வகுப்பு வருகிற 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுற... மேலும் பார்க்க