கிரேன் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
பெரியகுளம் அருகே ஞாயிற்றுக்கிழமை கிரேன் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (45). தனியாா் தொழிற்சாலையில் வேலை பாா்த்து வரும் இவா், ஞாயிற்றுக்கிழமை ஆண்டிபட்டி- பெரியகுளம் சாலையில் வாய்க்கால் பாலம் அருகே நடந்து சென்றபோது, பின்னால் வந்த கிரேன் இவா் மீது மேதியது. இதில் பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஜெயமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.