டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!
தேனி மாவட்டம், சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா் அனுமதியளித்தனா்.
கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த 6 நாள்களாக இந்த அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கோடை விடுமுறையையொட்டி, சுருளி அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு மேல் அருவியில் நீா்வரத்து குறைந்தது. மேலும், வனப் பகுதியிலும் மழைப் பொழிவு இல்லாததால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.
அருவியில் நீா்வரத்து இதே நிலையில் தொடா்ந்தால், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், நீா்வரத்து அதிகரித்தால், தடை விதிக்கப்படும் எனவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.