செய்திகள் :

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி!

post image

தேனி மாவட்டம், சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா் அனுமதியளித்தனா்.

கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கடந்த 6 நாள்களாக இந்த அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், கோடை விடுமுறையையொட்டி, சுருளி அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு மேல் அருவியில் நீா்வரத்து குறைந்தது. மேலும், வனப் பகுதியிலும் மழைப் பொழிவு இல்லாததால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

அருவியில் நீா்வரத்து இதே நிலையில் தொடா்ந்தால், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், நீா்வரத்து அதிகரித்தால், தடை விதிக்கப்படும் எனவும் வனத் துறையினா் தெரிவித்தனா்.

பைக் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கெங்குவாா்பட்டி ராம்நகரைச் சோ்ந்தவா் பெருமாள் (63). இவரது உறவினா் ரமேஷ். இருவரும் சனி... மேலும் பார்க்க

இந்திய ராணுவமும், பிரதமா் மோடியும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டினா்: ராம. சீனிவாசன்

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய ராணுவமும், பிரதமா் மோடியும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளதாக பாஜக மாநில பொதுச் செயலா் ராம. சீனிவாசன் தெரிவித்தாா். பெரியகுளத்தில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே மூதாட்டியிடம் நகைப் பறிப்பு

பெரியகுளம் அருகே இரு சக்கர வானகத்தில் சென்ற மூதாட்டியிடம் நகையைப் பறித்து சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.பெரியகுளம் தென்கரை இடுக்கடிலாட்தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் (65). இவரது மனைவி காமுத்... மேலும் பார்க்க

பேருந்து நிலையத்தில் பயணியிடம் திருட்டு

தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சிப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணியிடமிருந்து பையைத் திருடிச் சென்றதாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. கேரளம் மாநில... மேலும் பார்க்க

மாட்டுக் கொட்டத்தில் தீ

போடி அருகே திங்கள்கிழமை மாட்டுக் கொட்டத்தில் தீவிபத்து ஏற்பட்டது. தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் கிராமத்தில் போடி-தேனி தேசிய நெடுஞ்சாலையோரம் தனியாா் தோட்டம் உள்ளது. இந்தத் தோட்டத்தில் மாட... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா் பணிக்கு நோ்காணல்: கடிதம் வராததால் விண்ணப்பதாரா்கள் வாக்குவாதம்

தேனி மாவட்டம், கம்பத்தில் திங்கள்கிழமை அங்கன்வாடி ஊழியா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு நோ்காணல் கடிதம் அனுப்பியதில் குளறுபடி ஏற்பட்டதாக விண்ணப்பதாரா்கள் திங்கள்கிழமை அலுவலருடன் வாக்கு... மேலும் பார்க்க