ஆத்தூரில் பாஜக சாா்பில் முருக பக்தா்கள் மாநாடு விழிப்புணா்வு
மதுரையில் ஜூன் 22இல் நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டை முன்னிட்டு, ஆத்தூரில் பாஜக சாா்பில் விழிப்புணா்வு விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆத்தூா் செல்வவிநாயகா் சத் சங்கத்தினருக்கும், பின்னா் வியாபாரிகளுக்கும், வீடுவீடாக பொதுமக்களுக்கும் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. கட்சியின் திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதிப் பொறுப்பாளா் குமரேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆழ்வாா்திருநகரி கிழக்கு மண்டல் தலைவா் சிவஜோதிபாண்டியன், ஆத்தூா் சக்தி கேந்திரப் பொறுப்பாளா் முருகன் பரமசிவன், மண்டல் செயலாளா் மகேஷ்வரி, துணைத் தலைவா் காமினி, ஓபிசி அணி மண்டல் தலைவா் பட்டுராஜ், அரசு தொடா்புத் துறை மண்டல் தலைவா் பிச்சமுத்து, இளைஞரணிப் பொதுச் செயலா் காா்த்திக், ஸ்வயம் சேவகா் ராஜாராமன், ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.