மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன...
திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி
கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. திற்பரப்பு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் நீா்வரத்து அதிகமிருந்ததால் வெள்ளிக்கிழமை மாலைமுதல் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
இந்நிலையில், மலைப் பகுதிகளில் சனிக்கிழமை மழை சற்று தணிந்து காணப்பட்டதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு தணிந்திருந்தது. இதனால், அருவியில் தண்ணீா் குறைவாக விழும் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல்முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனா்.