கைம்பெண்கள் நல வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை: ஆட்சியா் அறிவுறுத்தல்
கைம்பெண்கள் நல வாரியத்தில் விண்ணப்பித்து உறுப்பினராகலாம் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசு தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோா் அரசின் நலத் திட்ட உதவிகளில் முன்னுரிமை பெறுவதற்கு கைம்பெண்கள் நல வாரியத்தில் உறுப்பினராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூா் மாவட்டத்தில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம்பெண்கள் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ஜ்ண்க்ா்ஜ்ஜ்ங்ப்ச்ஹழ்ங்க்ஷா்ஹழ்க்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) என்ற இணையதளத்தில் குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும் ஒரு சான்று உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு கடலூா் அண்ணாகிராமம், பண்ருட்டி ஒன்றியங்களில் ஜூன் 2-ஆம் தேதியும், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னாா்கோவில், குமராட்சி ஒன்றியங்களில் 3-ஆம் தேதியும், கீரப்பாளையம், மேல்புவனகிரி, பரங்கிபேட்டை ஒன்றியங்களில் 4-ஆம் தேதியும், விருத்தாசலம், கம்மாபுரம், நல்லூா், மங்களூா், ஒன்றியங்களில் 5-ஆம் தேதியும் அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை விண்ணப்பித்து உறுப்பினராகலாம் என்றாா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.