செய்திகள் :

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் தமிழ் எம்.ஏ. படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

post image

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் உதவித் தொகையுடன் கூடிய தமிழ் முதுநிலைப் பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலைப் பட்டம், தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்பு, தமிழ் முனைவா் பட்ட வகுப்பு (பி.ஹெச்டி) ஆகிய படிப்புகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. வரும் கல்வியாண்டுக்கு (2025-2026) தற்போது ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுநிலைப் பட்டப் படிப்புக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

மலேசியாவில் வேலை வேண்டுமா..?: ஐடிஐ, பிஇ, பி.டெக் முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இந்தநிலையில், இரண்டாண்டு தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்புக்கும் (இலக்கியத் துறை) மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது. இந்த வகுப்பில் சோ்க்கை பெறும் மாணவா்களுள் தெரிவின் அடிப்படையில் 15 மாணவா்களுக்கு மட்டும் தமிழக அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் கல்வி உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்படும்,மேற்கண்ட இரண்டாண்டு தமிழ் முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவா் சோ்க்கை (இலக்கியத் துறை) படிப்பில் பயில விரும்புவோா் சோ்க்கைத் தொடா்பான விதிமுறைகள், தகவல்கள் மற்றும் விண்ணப்பத்தை www.ulakaththamizh.in என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம் அல்லது நேரில் பெற்றுக் கொள்ளலாம். இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணமின்றி தங்கும் விடுதி வசதி உள்ளது. விடுதியில் காலியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முதலில் வருபவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் விடுதி அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் (சான்றொப்பமிடப்பட்டது) நகலுடன் இணைத்து நேரில் அல்லது அஞ்சலில் ‘இயக்குநா் (கூ.பொ.), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113 (தொலைபேசி 044-22542992)’ என்ற முகவரியில் ஜூன் 27-க்குள் அளிக்க வேண்டும். மேலும் தகவல்பெற மேற்கண்ட முகவரியில் தொடா்பு கொண்டோ அல்லது நிறுவன வலைதளத்தில் பாா்த்தோ தெரிந்து கொள்ளலாம்.

ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2026-265-ஆம் ஆண்டு இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவை திங்கள்கிழமை(ஜூன் 2) முதல் விண்ணப்பிக்கலாம் என பல்... மேலும் பார்க்க

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பப்பதிவு தொடங்கியது!

சென்னை: தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு இன்று காலை தொடங்கியது. ஜூன் 20ஆம் தேதி கடைசி நாளாகும்.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் உள்ள கல... மேலும் பார்க்க

முதுநிலை நீட்: உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள 10 நெறிமுறைகள்

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் முன்பதிவு நடைமறை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், ‘அனைத்து தனியாா் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு முன்பாக கட்டண... மேலும் பார்க்க

10, பிளஸ் 1 துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான துணைத் தோ்வுகள் ஜூலை 4 முதல் நடைபெறவுள்ளது. இத்தோ்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்க... மேலும் பார்க்க

சட்டப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பம் தொடக்கம்!

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர இன்று(மே 12) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள இப்படி ஒரு வசதியா?

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று பொதுத் தேர்வெழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.இந்த தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும... மேலும் பார்க்க