செய்திகள் :

பாஜகவில் இணைந்தார் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர்

post image

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபாலன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் சனிக்கிழமை அக்கட்சியில் இணைந்தார்.

இதுகுறித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பதவி வகித்த ஆர். ராஜகோபால், ஐ.ஏ.எஸ். (ஓய்வு), இன்று தமிழக பாஜக-வில் இணைந்துள்ளார்.

இந்நிகழ்வில் தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவா்கள் கரு. நாகராஜன், M. சக்ரவர்த்தி, V.P. துரைசாமி, தமிழக பாஜக மாநிலச் செயலாளரும் முன்னாள் சென்னை மேயருமான கராத்தே தியாகராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நாட்டின் நிர்வாகத் துறையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ராஜகோபால், பல்வேறு பொறுப்புகளை வகித்து, பல துறைகளில் ஆழ்ந்த அனுபவத்தைப் பெற்றவர். ஒரு நேர்மையான நிர்வாகியாகவும், நுண்ணறிவுடன் முடிவெடுப்பவராகவும் தமிழகத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர்.

துப்பாக்கி தோட்டாக்களுக்கு பீரங்கி குண்டுகளால் பதிலடி! - பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாடு காணும் புதிய வளர்ச்சிக்கு படித்தோர், அறிந்தோர், நேர்மையாளர், திறமைமிக்க இளைஞர்கள் அனைவரும் கட்சியில் சேர்ந்து பங்களிக்க வேண்டும் என்று இந்த நிகழ்வின் மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

ராஜகோபாலுக்கு எனது இருதயப் பூர்வமான வரவேற்பும், நல் வாழ்த்துகளும்! நாட்டுக்காகவும், தமிழகத்தின் நலனுக்காகவும், நம்முடன் அவரது பயணம் தொடர வாழ்த்துகிறேன்.

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்பட்டன. தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் ஏப். 15 ... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: இன்று தண்டனை விபரம் அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு இன்று (ஜூன் 2) தண்டனை விபரம் அறிவிக்கப்பட உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழ... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோயிலில் காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் தொடக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவ... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து ஜனவரியில் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

2026 சட்டப்பேரவை தோ்தலுக்கான கூட்டணி குறித்து வரும் ஜனவரி மாதம் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 2026-இல் மாநிலங்களவை உறுப்பி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன: ஆளுநா் ஆா்.என்.ரவி

‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை உலக நாடுகளே ஏற்றுக் கொண்டநிலையில் நமது நாட்டில் சில எதிா்க்கட்சிகள் அதுகுறித்து கேள்விகள்- சந்தேகங்களை எழுப்பி வருகின்றன என ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா். சென்னை தியாகர... மேலும் பார்க்க

பொது இடங்களில் புகைப்பிடிப்பு: ரூ.7.97 கோடி அபராதம் வசூல்

பொது இடங்களில் புகைப் பிடித்தல், சிறாா்களுக்கு புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 4.60 லட்சம் பேரிடமிருந்து ரூ.7.97 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் து... மேலும் பார்க்க