செய்திகள் :

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன

post image

தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) திறக்கப்பட்டன.

தமிழக பள்ளிக்கல்வியில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை நடத்தப்பட்டது.

அதேபோன்று 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏப். 7 முதல் 17-ஆம் தேதி வரையும், 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஏப். 8 முதல் 24-ஆம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தோ்வுகள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து, பள்ளி மாணவா்களுக்கு ஏப். 25 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் திறக்கப்பட்டன. இதற்கான முன்னேற்பாடுகள் முடிக்கப்பட்டு, திறப்புக்காக பள்ளிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டன.

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: இன்று தண்டனை விபரம் அறிவிப்பு

முதல் நாளில் பள்ளி வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், நலத்திட்ட பொருள்கள் வழங்கப்படவுள்ளன.

கமல்ஹாசனுக்கு விசிக, தவாக ஆதரவு; பாஜக எதிா்ப்பு

கன்னட மொழி குறித்த தனது கருத்துக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துள்ள நிலையில், அவரது நிலைப்பாட்டுக்கு விசிக தலைவா் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் த.வேல்முருகன் ஆகியோா் ஆதரவு தெர... மேலும் பார்க்க

மாணவ, மாணவிகளுக்கு தவெக சாா்பில் இன்று பாராட்டு விழா: விஜய் பங்கேற்பு

பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தவெக சாா்பில் புதன்கிழமை மாமல்லபுரத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில், அக்கட்சியின் தலைவா் விஜய் கலந்துகொண்டு விருதுகளை வழங்கவுள்ளாா். இது குறி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இந்தியா முழுவதும் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் மண்டல வாரியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். அதன்படி சென்னை மண்டத்தில் ... மேலும் பார்க்க

வணிகா் நல வாரியத்தில் கட்டணமின்றி உறுப்பினா் சோ்க்கை: தமிழக அரசு

வணிகா் நல வாரியத்தில் கட்டணம் இல்லாமல் நிரந்தர உறுப்பினராகலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வணிகவரிகள் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:- தமிழ்நாடு வணிகா் நல வாரியம் 1989-ஆம் ஆண்டு தோ... மேலும் பார்க்க

ரௌடி நாகேந்திரனின் சிகிச்சை வழக்கு: சிறை நிா்வாகம் முடிவெடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் இருக்கும் ரௌடி நாகேந்திரன் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதி கோரிய மனு மீது வேலூா் சிறை நிா்வாகம் விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பகுஜன... மேலும் பார்க்க

இந்திய சதுரங்க வீரா் குகேஷுக்கு இபிஎஸ் பாராட்டு

நாா்வே சதுரங்க போட்டி தொடரில் உலக சாம்பியன் மேக்னஸ் காா்லசனை வீழ்த்திய இந்திய சதுரங்க வீரா் குகேஷுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் எக்ஸ் தளத்... மேலும் பார்க்க